மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் ; பாராளுமன்றில் இன்று விஷேட விவாதம்

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பிலான விவாதம் ஒன்று பாராளுமன்றில் இன்று பிற்பகல் 2 மணிக்கு  இடம்பெறவு...

images-11முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பிலான விவாதம் ஒன்று பாராளுமன்றில் இன்று பிற்பகல் 2 மணிக்கு  இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை,தன்னை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டத்துக்கு புறம்பான செயல் என மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.  இது அரசியல் அமைப்புக்கு உட்பட்டதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் 43வது பிரதம நீதியரசராக பொறுப்பேற்ற ஷிராணி பண்டாரநாயக்க, 2013ம் ஆண்டு அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசால் குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார். எனினும் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு, மொஹான் பீரிஸின் நியமனம் மற்றும் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கம் ஆகியன சட்டவிரோதமானது என கூறி, மீண்டும் ஷிராணியை பிரதம நீதியரசர் பதவியை தொடர அனுமதித்தது.

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை பதவியேற்ற அவர் அதற்கு மறுநாள் வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.

இதனை அடுத்து இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக கே.ஶ்ரீபவன்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் மொஹான் பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நான் பணி நீக்கப்பட்டுள்ளேன். நான் இன்னமும் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெறவில்லை, காரியாலயத்திலிருந்து வெளியேறவும் இல்லை. புற அழுத்தங்கள் காரணமாக என்னை பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் நீக்கியுள்ளனர், எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related

நீதியரசர் ஆப்ரூ கைது செய்யப்படுவாரா?

தமது வீட்டில் பணிசெய்த பெண்ணை கைத்துப்பாக்கியின் மூலம் அச்சுறுத்தி தாக்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரு கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறத...

பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட சரத் பொன்சேகாவுடன் ஐ.தே.க பேச்சு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம,சரத் ப...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சுப் பதவிகளுக்கு அதிகாரமுண்டு: தேர்தல்கள் ஆணையாளர்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளுக்கு அதிகாரம் உண்டு என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item