நீண்ட இடைவெளிக்கு பிறகு சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் செப்டம்பரில் வெளியாகிறது
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாறு, ...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_373.html

கடந்த 2012-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்களை ஜோசப் ஆன்டன் என்பவர் தொகுத்து நூலாக வெளியிட்டார்.
சல்மான் ருஷ்டி கடந்த 1988-ம் ஆண்டு எழுதிய சாத்தானின் வேதங்கள் என்ற நூல் இஸ்லாமியர்களை அதிகளவில் புண்படுத்தியதாக கூறப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சிறந்த நாவலாசிரியர் என்ற முறையில் சல்மான் ருஷ்டி இங்கிலாந்து ராணியின் சிறப்பு விருதைப் பெற்றார். இந்நிலையில், சல்மான் ருஷ்டி 7 ஆண்டுகளுக்கு பிறகு எழுதிய 2 வருடங்கள், 8 மாதங்கள், 28 இரவுகள் என்ற நாவல் 250 பக்கங்களில் வெளியாகிறது. இந்நாவலில் வரலாறு, மாயாஜாலம், காலம் கடந்து நிற்கும் காதல் அனுபவங்கள் அனைத்தும் அடங்கியிருக்கும்.
பகுத்தறிந்து காணும் திறன் இல்லாமல் இருளில் மூழ்கியிருக்கும் உலக மக்களுக்கு புதிய ஒளியை பாய்ச்சும் விதத்தில் இந்த நாவல் அமைந்திருக்கும்.சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது என்று இங்கிலாந்து புத்தக வெளியீட்டு நிறுவனமான ராண்டம் ஹவுஸ் நேற்று லண்டனில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது.