தனது பணிநீக்கம் தவறானது என்கிறார் மொகான் பீரிஸ்!
பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தாம் பணி நீக்கப்பட்ட முறைமை பிழையானது என முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். தனது பணி நீ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_321.html
பிரதம நீதியரசர் பதவியிலிருந்து தாம் பணி நீக்கப்பட்ட முறைமை பிழையானது என முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். தனது பணி நீக்கம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் நான் பணி நீக்கப்பட்டுள்ளேன். நான் இன்னமும் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெறவில்லை, காரியாலயத்திலிருந்து வெளியேறவும் இல்லை.புற அழுத்தங்கள் காரணமாக என்னை பதவியிலிருந்து சட்டவிரோதமான முறையில் நீக்கியுள்ளனர். உரிமைகளை விடவும் அதிகாரம் வலுவானது. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் ஷிராணி பண்டாரநாயக்கவை பணி நீக்கியுள்ளனர். இதுவே இறுதி முடிவாகும் என மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate