சிறுமிக்கு இரண்டு மாத சிறை , 1500 டொலர் அபராதம் : ஆக்கிரமிப்பு இஸ்ரேலின்மற்றுமொரு சாதனை

பலஸ்தீன் மேற்கு கரை பிரதேசத்தில் சியோனிச ஆக்கிரமிப்பு குடியேற்றக்காரர்கள் சென்ற கார்கள் மீது கற்களை வீசி தனது எதிர்ப்பை தெரிவித்த 14 வயது சி...

பலஸ்தீன் மேற்கு கரை பிரதேசத்தில் சியோனிச ஆக்கிரமிப்பு குடியேற்றக்காரர்கள் சென்ற கார்கள் மீது கற்களை வீசி தனது எதிர்ப்பை தெரிவித்த 14 வயது சிறுமி மீது  2 மாத சிறைத் தண்டனையையும் 1500 அமெரிக்க டொலர் அபராதத்தையும் விதித்து  இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றம் தீர்பளித்துள்ளது


palமேற்கு கரை­யி­லுள்ள பெரின் நகரை சேர்ந்த மாலக் அல்- – காடிப் என்ற சிறு­மிக்கே மேற்­படி தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சிறுமி தமது பூர்வீக நிலத்தில்   ஆக்கிரமிப்பு செய்து குடியேறிவரும் சியோனிச யூத ஆக்கிரமிப்பு குடியிருப்பாளர்கள் மீது கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்தமைகே இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது

ஆக்கிமிப்புக்களுக்கு எதிராக தமக்கு முடிந்த வகையில் எதிர்ப்பை காட்டும்   இளை­ஞர்­க­ளுக்கு எதி­ரான இஸ்­ரேலின் மிதமிஞ்­சிய நட­வ­டிக்­கை­யாக இது உள்­ள­தாக பலஸ்­தீ­னர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

ஆக்கிரமிப்பு இஸ்­ரே­லிய அதி­கா­ரி­களால் கடந்த மாதம் கைது செய்­யப்­பட்ட மாலக் –- அல் காடிப் இஸ்­ரே­லால் தடுத்து வைக்­கப்­பட்டு தண்­டனை விதிப்­புக்­குள்­ளான சிறு­மி­களில் இவளும் உள்ளடக்கப்படுகிறார்

கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இஸ்­ரே­லி­யர்­க­ளாலும் பலஸ்­தீ­னர்­க­ளாலும் பயன்­ப­டுத்­தப்­படும் மேற்­குக்­கரை வீதி­யி­னூ­டாக நடந்து சென்ற மாலக், அவ்­வ­ழி­யாக சென்ற சியோனிச யூத ஆக்கிரமிப்பளர்களின்  கார்கள் மீது  சிறுமி கற்­களை வீசி­யுள்ளார்

மாலக்­கிற்கு 2 மாத சிறைத்­தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக 1500 டொலர்  தண்­டப்­ப­ணத்தை செலுத்­தவும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

தனது 14 வயது மகள் படை­யி­ன­ருக்கு எது­வித அச்­சு­றுத்­த­லா­கவும் இருக்­க­வில்லை எனவும் பயிற்சி பெற்ற ஆயு­தங்கள் ஏந்­திய அந்த படை­யினர் தனது மகளால் என்ன அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்­டார்கள் என்­பது புரி­ய­வில்லை என மாலக்கின் தந்­தை­யான அலி அல் – காடிப் தெரி­வித்துள்ளார்

மாலக் மீது கற்­களை வீசி­யமை, கற்­களை வீச முயன்­றமை, கத்­தி­யொன்றை உடை­மை­யாக வைத்­தி­ருந்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

தற்­போது இஸ்­ரேலில் 5500 பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் ,சிறுவர் ,சிறுமியர் எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 150 பேர் சிறுவர்களாவர்.

Related

மியன்மார் தலைநகரில் ஒன்று திரண்ட பெளத்த துறவிகள்….

அச்சத்தின் காரணமாக  மியன்மாரில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறிவரும்  நிலையில் அதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிலவும் மியன்மார் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை...

பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள்

1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர். 2.பர்மா அரசு இந்த மக்களுக்கு பிரஜை உரிமை , பயணம் செய்யும் சுதந்திரம் ,கல்வி பெறும் உரிமையை முற்றிலுமா...

பர்மா விவகாரம் ;சவுதியில் ஆராய்வு

நேற்று செவ்வாய்க்கிழமை மக்கவுக்கு அருகாமையிலுள்ள அஞ்சும் ஹோட்டலில் இரவு 11.00 மணியளவில் சர்வதேச ரீதியான பிரமுகர்கள் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது மதீனா பல்கலைக் கழகத்தின் முதுமாணி கற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item