முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்ட முயற்சி
விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி சமாதானத்தைச் ...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_450.html
விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி சமாதானத்தைச் சீர்குலைக்க சில சக்திகள் முயன்று வருவதாகவும் இது தொடர்பில் அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் சமூகத்தலைவர்களும் விழிப்புடன் இருக்கும் படியும் சமூக நலன் பேணும் அமைப்பான உடனடி தீர்வுக்குழு (RRT) வேண்டுகோள் விடுத்துள்ளது.
RRT அமைப்பின் தலைவரும் வக்பு சபையின் உறுப்பினரும் ஹஜ் குழுவின் உறுப்பினருமான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களிடமும் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவரது வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாராளுமன்றத் தேர்தலொன்று அண்மித்திருக்கும் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான சில சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகையில் பொரளை பள்ளிவாசல் மீதான சம்பவத்தையும் ஓரிரு தினங்களுக்கு முன்பு இப்பாகமுவ பக்மீ கொல்லயில் இரவு நேர தொழுகையை மேற்கொள்ளச் சென்று கொண்டிருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் வாளால் வெட்டப்பட்டமையும் குறிப்பிடலாம்.
மேலும் கடந்த வியாழக்கிழமை கண்டி மீராமக்காம் பள்ளிவாசலும் கல்வீச்சு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு தொடரும் அசாதாரண சம்பவங்கள் மோசமான நிலையொன்றினை உருவாக்க காரணிகளாக அமையலாம்.
எனவே ஒவ்வோர் பிரதேசங்களையும் சேர்ந்த சமூகத்தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
பள்ளிவாசல் நிர்வாகங்கள் ஒன்று கூடி தமது எல்லைக்குட்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பையும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி சமாதானத்தைச் சீர்குலைக்க சில சக்திகள் முயன்று வருவதாகவும் இது தொடர்பில் அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் சமூகத்தலைவர்களும் விழிப்புடன் இருக்கும் படியும் சமூக நலன் பேணும் அமைப்பான உடனடி தீர்வுக்குழு (RRT) வேண்டுகோள் விடுத்துள்ளது.
RRT அமைப்பின் தலைவரும் வக்பு சபையின் உறுப்பினரும் ஹஜ் குழுவின் உறுப்பினருமான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களிடமும் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவரது வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாராளுமன்றத் தேர்தலொன்று அண்மித்திருக்கும் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான சில சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வகையில் பொரளை பள்ளிவாசல் மீதான சம்பவத்தையும் ஓரிரு தினங்களுக்கு முன்பு இப்பாகமுவ பக்மீ கொல்லயில் இரவு நேர தொழுகையை மேற்கொள்ளச் சென்று கொண்டிருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் வாளால் வெட்டப்பட்டமையும் குறிப்பிடலாம்.
மேலும் கடந்த வியாழக்கிழமை கண்டி மீராமக்காம் பள்ளிவாசலும் கல்வீச்சு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு தொடரும் அசாதாரண சம்பவங்கள் மோசமான நிலையொன்றினை உருவாக்க காரணிகளாக அமையலாம்.
எனவே ஒவ்வோர் பிரதேசங்களையும் சேர்ந்த சமூகத்தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
பள்ளிவாசல் நிர்வாகங்கள் ஒன்று கூடி தமது எல்லைக்குட்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பையும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

