60 வீத மக்களின் ஆதரவை பெற்ற சந்திரிக்காவும் தேர்தலில் குதிப்பார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனு வழங்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க...
https://kandyskynews.blogspot.com/2015/07/60.html
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனு வழங்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு கோருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் அரசியல் செயலாளர் பீ. திஸாநாயக்க இவ்வாறு அறிவித்துள்ளார்., 1994ஆம் ஆண்டு 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை பெற்ற அவர், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த சிக்களும் இல்லை என குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட அனுமதி வழங்கினால் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

