நிதிமோசடி எதிர்ப்பு பொலிஸ் பிரிவு குறித்து மஹிந்த தரப்பினர் அதிருப்தி!
நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவின் செயற்பாடு குறித்து நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினர், பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_393.html

சட்டத்துக்கு உட்பட்ட விதத்தில் இந்த பிரிவு அமைக்கப்படவில்லை என்று இதன்போது கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அரசியல்வாதிகளை கைது செய்யும் போது சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதற்கு பொலிஸ் மா அதிபர் வழங்கிய பதில் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினேஸ் குணவர்த்தன, வாசுதேச நாணயக்கார, ஜீ.எல் பீரிஸ், குமார வெல்கம ஆகியோர் பங்கேற்றனர்

