15 வயது முதல் தேசிய அடையாள அட்டை
15 வயது முதல் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கே தற்போது தேசிய அடையாள அட்டை ...
https://kandyskynews.blogspot.com/2015/06/15_19.html

18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கே தற்போது தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகின்றது.
இந்த நடைமுறையில் மாற்றம் செய்துää 15 வயது முதல் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி> பதினைந்து வயதை பூர்த்தி செய்யும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பம் செய்ய முடியும்.
மேலும் 18 வயதுக்கும் கூடிய அனைத்து தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவரையும் ஆட்பதிவு திணைக்களம் மீள் பதிவு செய்துää தரவுப் பட்டியல் ஒன்றை பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
நபர்கள் தொடர்பில் தேசிய பெயர் பட்டியல் ஒன்றை உருவாக்குவதன் மூலம் இலங்கைப் பிரஜைகள் பற்றிய தரவுகளை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றங்களைச் செய்வதற்கு 1968ம் ஆண்டு 32ம் இலக்க ஆட்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

