போர் வெற்றியைக் கொண்டாடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் முகமாக இன்று அஞ்சலி செலுத்த வருமாறு முன்னாள் ...

நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் முகமாக இன்று அஞ்சலி செலுத்த வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி போர் வெற்றியை கொண்டாடும் முகமாகவும் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு விகாரமாஹாதேவி பூங்காவிற்கு பொது மக்கள் அனைவரையும் வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்த அனைவரையும் ஞாபகமூட்டுவதற்காக என்னுடன் இணையுங்கள்.

எங்களது வீரர்களை நினைவில் வைத்திருக்கும் முகமாக உங்கள் வீடுகளில் மாலை 6:05 இற்கு விளக்கேற்றுவதிலும் அனைவரும் சேர்ந்து இணைந்து கொள்ளுங்கள் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(இரண்டாம் இணைப்பு)
மஹிந்த ராஜபக்ச தலைமையில் தற்பொழுது விகாரமாஹாதேவிப் பூங்காவில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இந் நிகழ்வில் கோத்தபாய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச பெளத்த பிக்குமார் உட்பட பெருமளவான மஹிந்தவிற்கு ஆதரவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.










Related

தலைப்பு செய்தி 5436914455090494480

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item