பதுளையில் கைக்குண்டு மீட்பு
பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை போக்கடமுல்ல மெதபத்தன ரவுன்பார என்ற பகுதியில் உள்ள ஓடையிலிருந்து கைக்குண்டு ஒன்றை பதுளை பொலிஸார் மீட்டு...
https://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_8.html
மாட்டுக்கு புற்கள் அறுக்க சென்ற நபர் ஒருவர் இந்த கைக்குண்டை கண்டு 119 என்ற விசேட இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிசார் இன்று காலை 7 மணியளவில் இக்கைக்குண்டை மீட்டதாக தெரிவிக்கின்றனர்.
எனினும் இக்கைக்குண்டு எவ்வாறு இப்பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பதை அறிந்துக்கொள்ளும் வகையில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

