நான் தப்பியோடவில்லை: காலம் பதில் சொல்லும் என்கிறார் பசில் ராஜபக்ச
நான் நாட்டை விட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டும் வெளியேறிவிட்டதாக வெளிவரும் தகவல்கள் உண்மையில்லையெனவும் காலம் பதில் சொல்லும் எ...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_941.html
நான் நாட்டை விட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டும் வெளியேறிவிட்டதாக வெளிவரும் தகவல்கள் உண்மையில்லையெனவும் காலம் பதில் சொல்லும் எனவம் தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச.
தேர்தல் முடிந்த கையோடு பசில் ராஜபக்ச தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் நாட்டை விட்டு பசில் ராஜபக்ச தப்பியோடிவிட்டதாகவே கருத்து நிலவுகிறது. எனினும் தான் மீள வருவது பற்றியும் குறிப்பிடாத அவர், தனது சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் ‘காலம் பதில் சொல்லும்’ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிந்த கையோடு பசில் ராஜபக்ச தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் நாட்டை விட்டு பசில் ராஜபக்ச தப்பியோடிவிட்டதாகவே கருத்து நிலவுகிறது. எனினும் தான் மீள வருவது பற்றியும் குறிப்பிடாத அவர், தனது சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் ‘காலம் பதில் சொல்லும்’ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

