கம்மன்பில 100 ரூபாயாக பொதுமக்களிடம் சேர்த்த பணத்தை (இலட்சக்கணக்கான ரூபாக்கள்) திருப்பிக் கேட்டு இன்று ஆர்பாட்டம்.
மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில அவர்கள் ஹெல உறுமய சார்பில் சென்ற மாகாண சபை தேர்தலின் போது. பொது மக்களிடம் ஒருவரிடம் 100 ரூபா வீதம் ...
https://kandyskynews.blogspot.com/2015/01/100_14.html

மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில அவர்கள் ஹெல உறுமய சார்பில் சென்ற மாகாண சபை தேர்தலின் போது.
பொது மக்களிடம் ஒருவரிடம் 100 ரூபா வீதம் பலரிடம் (வாக்காளர்கள்) வசூல் செய்த பணத்தை திரும்ப தரவேண்டும் என கேட்டு ஹெல உறுமய இன்று ஆர்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளது.
இன்று மாலை பொரள்ளயில் இந்த ஆர்பாட்டத்தை நடத்துவதாக ஹெல உறுமய தெரிவித்துளது. நல்லாட்சியை உத்தரவாதம் செய்து உதய கம்மன்பில இந்த பணத்தை வசூல் செய்ததாக ஹெல உறுமய ஊடக அறிவிப்பளார் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்.
மக்களிடம் இருந்து தாம் 43 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டதாக முன்னதாக உதய கம்மன்பில தேர்தலில் வெற்றி பெற்றபோது தெரிவித்து இருந்தார். அந்த பணத்தை திரும்ப தரவேண்டும் என்று கூறியை ஹெல உறுமய தம் ஆர்பாட்டத்தை முன்னெடுக்கிறது.

