ராஜபக்ஷவினரில் எவரும் மாறவில்லை புதிதாக ஆரம்பிக்க புதியவர் வேண்டும்
ராஜபக்ஷவினர் மாறவில்லை எனவும் புதிதாக ஆரம்பிக்க வேண்டியவர் புதியவராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்...


ராஜபக்ஷவினர் மாறவில்லை எனவும் புதிதாக ஆரம்பிக்க வேண்டியவர் புதியவராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
மஹிந்த ராஜபக் ஷ புதிய கோஷம் ஒன்றை முன்வைத்துள்ளார். நாட்டுக்கு உயிரூட்ட புதிதாக ஆரம்பியுங்கள் என்ற கோஷத்தை அவர் முன்வைத்துள்ளார்.புதிதாக ஆரம்பிக்க புதியவர் ஒருவர் வேண்டும். எனினும் எந்த விடயமும் புதிதாகவில்லை. மஹிந்த, பஷில், நாமல் இந்த ராஜபக் ஷவினரில் எவரும் மாறவில்லை.
ஜே.ஆர்.ஜெயவர்தன, பிரேமதாசவுக்கு தலைமைத்துவத்தை கொடுத்தார். அவர் பிரதமர் பதவியையோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியையோ கோரவில்லை.
சந்திரிகா குமாரதுங்கவும் அப்படித்தான். பின்னால் வந்து பிரதமர் பதவியை தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறும் கோரவில்லை.ஆனால், மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக,அரசாங்கத்தின் தலைவராக, அமைச்சரவையின் தலைவராக, முப்படைத் தளபதியாக பதவிகளை வகித்து விட்டு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக முயற்சித்து வருகிறார்.இது தெளிவான அதிகாரப் பேராசை என்றே கூறவேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.