அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது
தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் பயணித்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_14.html

தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் பயணித்த 03 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களிடம் இன்று (02) காலை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதான இந்திய மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.


Sri Lanka Rupee Exchange Rate