நாளை நாடு திரும்பும் பசிலை சுதந்திரக் கட்சி வரவேற்க வேண்டும்! – என்கிறார் பிரசன்ன ரணதுங்க

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாளை நாடு திரும்புகிறார். இந்நிலையில், அவரை வரவேற்கவுள்ளதாக தெரிவித்துள்ள மேல் மாகா...

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாளை நாடு திரும்புகிறார். இந்நிலையில், அவரை வரவேற்கவுள்ளதாக தெரிவித்துள்ள மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொள்ளுமாறு அவரிடம் கோரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பசில் ராஷபக்ஷ நாடு திரும்பியதும் தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்தில் விரிவான பேச்சுவார்த்தையொன்றை நடத்த ஏற்பாடு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.

இதேவேளை, ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ரணதுங்க, ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து. நாடு திரும்பும் பசில் ராஜபக்ஷ, மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையத் தயாராக இருப்பாராயின், அவரை கட்சியினர் வரவேற்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Related

இலங்கை 7376033268732700805

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item