இன ,மத ரீதியில் குரோதத்தை தூண்டுவோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை ?
இன ,மத ரீதியில் குரோதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடும் தரப்பினருக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_0.html

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த உத்தேச சட்டத்தை சமர்ப்பித்துள்ளார். இன மற்றும் மத ரீதியில் குரோதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடும் தரப்பினருக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தை முன்னதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவை விவாத பட்டயலில் சமர்ப்பித்த போதிலும் அது தொடர்பில் அமைச்சரவையில் விவாதத்துக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது