பல கோஷங்களுடன் குருநாகலில் நடைபெறும் மகிந்த எதிர்ப்பு ஆர்பாட்டம்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்நிலையில், முன்னா...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_801.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குருநாகல் பேருந்து நிலையத்திற்கு எதிரில் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வடமேல் மாகாணத்தை போதைப் பொருள் மாகாணமாக மாற்றுபவரை தடுப்போம். ஊழல்வாதிகளுக்கு உங்கள் விருப்பு வாக்குகளை வழங்கவேண்டாம், என்ற தொனிப்பொருள்களில் ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுந்தன.
மேலும், நாட்டுக்கு வேண்டாம் என்றால், வடமேல் மாகாணத்திற்கு எதற்கு என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்

