மஹிந்தவுக்கு வேட்பு மனு இல்லை: மைத்திரி உறுதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்லது ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் பொது தேர்தலு...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்லது ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் பொது தேர்தலுக்கு வேட்பு மனு வழங்குவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வேட்பு மனு வழங்க தீர்மானித்துள்ளதாக கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேம ஜயந்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் ஊடக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எனினும், கூட்டணி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் இது தொடர்பில் அமையதியாகவே உள்ளார்.

எப்படியிருப்பினும், இது தொடர்பில் தனது இறுதி முடிவை எதிர்வரும் 24 மணித்தியத்திற்குள் அறிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேற்று அறிவித்திருந்தார்.

Related

இலங்கை 8151579201085182146

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item