பன்சலைக்கும் கோயிலுக்கும் பள்ளிக்கும் சென்றேன்...
எனது மனது தெளிவாக இருக்கிறது...! "உண்மையில் எனக்குள் மன அமைதியை உணர்கிறேன் என்றாலும் ஓய்வற்ற தன்மை என்றால் குறையவில்லை. முன்பெல...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_112.html
எனது மனது தெளிவாக இருக்கிறது...!
"உண்மையில் எனக்குள் மன அமைதியை உணர்கிறேன் என்றாலும் ஓய்வற்ற தன்மை என்றால் குறையவில்லை. முன்பெல்லாம் நான் ஓய்வின்றி செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த நிலை தற்போது சிறிது குறைந்துள்ளது. கிராமத்தில் இருந்தேன். மக்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசினேன். எனது கிராமத்துக்கு மக்கள் வருகிறார்கள். நான் பன்சலைக்குச் செல்கிறேன். கோயிலுக்குச் செல்கிறேன். பள்ளிக்குச் செல்கிறேன். மிகவும் சுதந்திரமான மனது கிடைத்துள்ளது."
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியதையடுத்து அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தினமும் திடீர் திருப்பங்கள் மக்களைத் திகைக்க வைக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் பல சவால்கள் விடுக்கப்படுகின்றன. அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில் லங்காதீப வார பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய நேர்காணலை எமது வாசகர்களுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்.
"உண்மையில் எனக்குள் மன அமைதியை உணர்கிறேன் என்றாலும் ஓய்வற்ற தன்மை என்றால் குறையவில்லை. முன்பெல்லாம் நான் ஓய்வின்றி செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த நிலை தற்போது சிறிது குறைந்துள்ளது. கிராமத்தில் இருந்தேன். மக்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசினேன். எனது கிராமத்துக்கு மக்கள் வருகிறார்கள். நான் பன்சலைக்குச் செல்கிறேன். கோயிலுக்குச் செல்கிறேன். பள்ளிக்குச் செல்கிறேன். மிகவும் சுதந்திரமான மனது கிடைத்துள்ளது."
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியதையடுத்து அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தினமும் திடீர் திருப்பங்கள் மக்களைத் திகைக்க வைக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் பல சவால்கள் விடுக்கப்படுகின்றன. அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில் லங்காதீப வார பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய நேர்காணலை எமது வாசகர்களுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்.
என்னைப் பற்றி தவறான கருத்துகள் முஸ்லிம்கள் மத்தியில் பரப்பப்பட்டன.தமது சமயத்துக்கும் சமூகத்துக்கும் எதிரானவர் என்று எவரையும் நினைத்து விட்டால் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அரச தலைவரையும் பாதிக்கும். முஸ்லிம்கள் என்னிலிருந்தும் தூரமாகியதற்கு தவறான பிரச்சாரங்களே காரணம் என்கிறார் மஹிந்த ராஜபக் ஷ அவரது முழுமையான நேர்காணலை இங்கு தருகிறோம்.
Q : ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் தோற்றும் போய் 7 மாதங்கள் கடந்து விட்டன. இந்தக் கடந்து போன 7 மாதங்களும் எவ்வாறு அமைந்தன.இந்நாடு ஸ்தம்பித்து விட்டதாக எனக்குத் தெரிந்தது. அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன. வேலையின்மை அதிகரித்து விட்டது. இந்நாட்டின் வர்த்தகர்களிலிருந்து விவசாயிகள் வரை தொழிலாளர்கள் வரை அனைவரும் கஷ்டங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
Q : உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் உணர்கிறீர்களா?
உண்மையில் எனக்குள் மன அமைதியை உணர்கிறேன் என்றாலும் ஓய்வற்ற தன்மை என்றால் குறையவில்லை. முன்பெல்லாம் நான் ஓய்வின்றி செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த நிலை தற்போது சிறிது குறைந்துள்ளது.
கிராமத்தில் இருந்தேன். மக்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசினேன்.
எனது கிராமத்துக்கு மக்கள் வருகிறார்கள். நான் பன்சலைக்குச் சென்றேன். கோயிலுக்குச் சென்றேன். பள்ளிக்குச் சென்றேன். இதனால் எனது மனது தெளிவாக இருக்கிறது.
Q : மக்கள் மாற்றமொன்றையே கேட்டார்கள். அந்த மாற்றம் உங்களுக்கு கிடைத்தது?
இல்லை. அந்த மாற்றமல்ல. நாட்டு மக்களுக்கு கிடைத்த மாற்றம் எனக்குக் கிடைத்துள்ளதாக உணர்கிறேன். அதுதான் உண்மை. ஏற்பட்ட மாற்றத்தினால் தான் நாட்டின் அபிவிருத்திகள் தடைப்பட்டு விட்டன.
பழிவாங்கல் வேகம் அதிகரித்துள்ளது. நாடு அழிவுக்குள்ளாகி விட்டது.
மக்கள் இந்த மாற்றத்தை இப்போது உணர்கிறார்கள். நானும் உணர்கிறேன். மோட்டார் சைக்கிள்களை நாம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யவில்லை அல்லவா?
Q : நீங்கள் தோல்வியைத் தழுவி 7 மாதங்கள். தோல்வியைப் பற்றிப் நினைத்துப் பார்க்க இந்தக் காலம் போதுமானது. நீங்கள் உங்கள் தோல்வியை நினைத்துப் பார்த்தீர்களா?
தோல்விக்கான காரணங்கள் அனைவருக்கும் தெரிகிறது. நான் எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெற்றேன்? ஆசனங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். இது தொடர்பில் நான் திருப்தியுறுகிறேன்.
பல்வேறு இன மக்களின் மனங்களில் விதைக்கப்பட்ட தவறான கருத்துக்கள் எனது தோல்விக்கு காரணம் எனலாம். இதேவேளை வடக்கு கிழக்கு வாக்குகள் தான் காரணமாக அமைந்தது.
எனக்கு கிடைத்த வாக்குகளை நோக்கினால் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகும்.
"முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை நாங்கள் கட்டுபடுத்த முயற்சித்தோம் என்றாலும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டதால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமற் போனது. பொய்யான கருத்துகள் பிரச்சாரம் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது இலகுவான காரியமல்ல."
Q : ஏன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை உங்களால் பெற்றுக் கொள்ள முடியாமற் போனது?
பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள் அல்லவா? நாம் வடக்கை அபிவிருத்தி செய்தோம்.தமிழ் டயஸ்போரா தமிழ் மக்களை பெரிதும் மாற்றியிருந்தது.
யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்த நிலைப்பாட்டிலே அவர்கள் தொடர்ந்தும் இருந்தார்கள். மறந்து விடாதீர்கள். 2010இல் எனக்கு கிடைத்த வாக்குகளை விட இரு மடங்கு வடக்கிலிருந்து கிடைத்துள்ளது.
Q : முஸ்லிம் மக்கள் உங்களிலிருந்தும் தூரமாகிவிடுவதற்கு பொதுபல சேனா போன்ற அமைப்புகள் காரணமாக இருந்தன என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள்?
அதைத்தான் நான் சொன்னேன். என்னைப் பற்றி தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. தமது சமயத்துக்கு எதிரானவர் எமது சமூகத்துக்கு எதிரானவர் என்று அச்சமய மக்கள் நினைத்து விட்டால் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
அது அரச தலைவரையும் பாதிக்கும்.
என் மீதிருக்கும் தனிப்பட்ட பிரச்சினைக்கு அல்ல முஸ்லிம் மக்கள் என்னிடமிருந்து தூரமாகியது. தவறான பிரச்சாரங்களே காரணம்.
Q : ஏன் நீங்கள் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.?
நாங்கள் கட்டுபடுத்த முயற்சித்தோம் என்றாலும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டதால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமற் போனது.
பொய்யான கருத்துகள் பிரச்சாரம் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது இலகுவான காரியமல்ல.
Q : நீங்கள் தோற்கடிக்கப்பட்டது உங்களது தவறினால் அல்ல என்று நம்புகிறீர்களா?
இப்படித்தான் நாங்கள் உண்மையான கதையைப் பேசுவோமே. அமெரிக்கா இப்போது சொல்கிறது..... இந்த மாற்றத்துக்கு அவர்கள் பங்குதாரர்களானார்கள் என்று. அந்நாட்டின் தலைவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அடுத்து இங்கிலாந்து ஆட்சி மாற்றத்துக்கு அவர்களும் பங்குதாரர்கள் ஆனார்கள் என்று தெரிவிக்கிறது.
இவர்கள் பகிரங்கமாக இதைத் தெரிவித்தவர்கள். பகிரங்கமாக தெரிவிக்காத கோஷ்டியொன்றும் உள்ளது. அவ்வாறான நாடுகள் உள்ளன. இவ்வாறு பலம் பொருந்திய சக்திகள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை அமுல்படுத்தியுள்ளன.
இது எனது தவறுகளினால் நிகழ்ந்ததல்ல.
Q : நீங்கள் சீன அரசாங்கத்துடன் கொண்டிருந்த நெருங்கிய உறவின் காரணமாக உலகின் அநேக நாடுகள் உங்களுக்கு எதிரிகளாயின?
அது முற்றும் தவறான கருத்தாகும். நான் சீனாவுடன் நெருங்கிய உறவு கொள்ளவில்லை. எனது நாட்டுடனே நெருங்கியிருந்தேன். அது எனது கடமை. நான் யாருக்கு எனது கடமையை நிறைவேற்ற வேண்டும்?
எனது நாட்டுக்காகத் தானே சேவை செய்யவேண்டும்.
கடமை உணர்வுடன் இருக்க வேண்டும். எனது நாட்டு மக்களின் நன்மைக்காக நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் கடமை எனக்கிருந்தது. இந் நாட்டுக்கு அபிவிருத்திகள் தேவை என்பதை நான் உணர்ந்தேன். அபிவிருத்தி இல்லாவிட்டால் மக்களிடம் பணம் இல்லாவிட்டால் அவர்கள் வறியவர்களாகி விடுவார்கள்.
தொழிலற்றவர்களாகி விடுவார்கள் அபிவிருத்தி இல்லாவிட்டால் நாட்டுக்கு மின்சாரம் இல்லாவிட்டால் மக்கள் தெருக்களில் உள்ள குழிகளில் விழுந்து விழுந்து பயணிக்க வேண்டியேற்படும்.
தகவல் தொழிநுட்பத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்தோம். இந்த அபிவிருத்திகளைத் தான் உலக நாடுகளுடன் சேர்ந்து மேற்கொண்டோம்.
Q : நீங்கள் இந்தியாவுடன் கோபித்து கொண்டீர்கள் ?
இல்லை.
இந்தியாவுடன் கோபித்துக் கொள்ளவில்லை ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். எமக்கெதிரான சக்திகள் அனைத்தும் ஒன்றாக வந்த போது அந்த சக்திகள் மேற்கொண்ட பிரச்சாரங்களுக்கு நாங்கள் சரியாக பதிலளிக்கவில்லையென்றே நான் நினைக்கிறேன். அந்த இடத்திலே எமது பலவீனம் இருக்கிறது.
எந்த நாடென்றாலும் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்துவிட முடியும்.
இந்தியா எம்முடன் கோபித்து கொண்டது என நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை.
தென்னிந்தியாவின் அரசியல் நிலைமைக்கு என்னால் மாறிக் கொள்ளப் முடியாது. என்றாலும், என்ன இல்லாமற் போனாலும் எனது நாட்டைக் காட்டி கொடுக்க முடியாது.
எமது நாட்டின் அபிவிருத்திக்கு இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது.
இன்று எமது நாட்டில் இந்திய சாமான்கள் அல்லவா இருக்கின்றன. இப்போதைய வெளிநாட்டுக் கொள்கையை உலகம் ஏற்று கொண்டுள்ளதா?
இன்று வரை எத்தனை நாடுகள் எம்முடன் முரண்பட்டுக் கொண்டுள்ளன? மேலைத்தேய நாடுகள் உதவிக்குவரும் என்ற நம்பிக்கையிலேயே பல நாடுகளுடன் கோபித்துக் கொண்டுள்ளனர்.
நாங்கள் பிரிவுபடாத மக்கள் பிரிவு படாத நாடு ஆனால் இன்று பிரிவுபட்ட மக்கள் பிரிவுபட்ட நாடு இதுதான் வேறுபாடு.
Q : ஜனவரி 8ஆம் திகதி தோல்விக்கு ராஜபக் ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா?
தோல்வியுற்றால் எப்போதும் எவர் மீதாவது பழி சுமத்தபடுகிறதல்லவா? 1977 இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியுற்ற போது அத்தோல்வி இலங்கரத்ன மீது சுமத்தப்பட்டது.
பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்டது. அவர்கள் தோல்விக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்கள். பச்சை பொய் சொன்னார்கள். இந்தப் பொய் மிகவும் காலதாமதமாகியே புரிந்தது. அடுத்தவர்கள் செய்த தவறுகளை இப்போது எவரும் கூறுவதில்லை
இருக்கும்போது எல்லோருக்கும் ஏசுவார்கள். தோற்றதன் பின்பு ஒருவர் அல்லது இருவரை மாத்திரம் தோல்விக்கு காரணமாக மையப்படுத்திக் கொள்வார்கள். காய்க்கும் மரத்துக்குதானே கல் எறியப்படும்.
இது உலகின் சுபாவம்.
Q : நீங்கள் தேசிய சொத்துக்களை களவெடுத்திருக்கலாம் கோடிக்கணக்கான பணத்தை வெளிநாட்டில் வைப்பிலிட்டீர்கள் என்று குற்றச்சாட்டு இருக்கிறது.
பைல் கட்டுக்களை கொண்டு வந்தல்லவா காட்டினார்கள். காட்டிய அந்த பைல் கட்டுகளிலிருந்து தேடிக் கொள்ள முடியுமல்லவா? வங்கிகளிலிருந்து தேடி கண்டு பிடித்துக் கொள்ளலாம் அல்லவா?
இவர்கள் கூறுவது பில்லியன் 18 ஐப் பற்றியல்லவா? 18 பில்லியன் அல்ல குறைந்தது. 1.8 பில்லியனை தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொல்லுங்கள்.
அதிகம் தேவையில்லை 10 டொலர் தேடிக் கொண்டு வரச் சொல்லுங்கள் இது தான் அரசியல் சேறு பூசல் என்று சொல்லுவது.
Q : வெளிநாட்டிலுள்ள சொத்துக்களை தேடிக் கண்டுபிடிக்க நீண்ட காலம் செல்லும் என வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளர்?
இது பச்சை பொய். உலகில் எந்த கணக்கையும் எந்த இடத்திலிருந்தும் பார்த்துக் கொள்ளும் வகையில் இன்று தொழிநுட்பம் முன்னேறியுள்ளது. அமெரிக்காவுக்குத் தெரியாமல் களவில் டொலரில் கொடுக்கல் வாங்கல் செய்ய செய்ய முடியுமா?
ஒரு பொத்தானை அழுத்திக் கண்டுபிடிக்கலாம். இவர்கள் எனது பெயர் இருப்பதாக கூறி சுவீஸ் வங்கி அதிகாரிகளை அழைத்து வந்தார்கள். பெயர் பட்டியலை டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள்.
அந்தப் பட்டியல் என தல்ல என்னுடன் தொடர்புபட்டவர்களதோ எனது பகுதியைச் சேர்ந்தவர்களதோ பெயர் இருக்கவில்லை. பெயரைச் சொல்லி மனிதர்கள் மீது சேறு பூசுவது இலகுவானது. எனக்கு வேறு எதுவும் சொல்ல முடியாதல்லவா?
அபிவிருத்தி செய்யவில்லை என்று கூறமுடியாது. பாதைகள் அமைத்தது பிழையானது என்றும் சொல்ல முடியாது. அதனால் தான் இவ்வாறு சேறு பூசுகிறார்கள்.
Q : ஆனால் அபிவிருத்தி வேலைகளிலும் பாதை நிர்மாணங்களிலும் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு இருக்கிறதே?
அதைத்தான் நான் சொல்ல முயற்சித்தேன். செய்து முடித்த நல்ல வேலைகளை தவறானது எனக் கூற முடியாது. ஆனால் செய்த நல்ல வேலைக்குள் அவ்வாறனவை (கமிஷன்) இருந்ததாக கூறுகிறார்கள்.
இப்படிக் கூறித்தான் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்றார்கள். மத்திய வங்கியின் பிணைமுறி கொள்ளையைப் பாருங்களேன். அது ஒரு கொள்ளை.
அது களவு அல்ல. நான் அதை களவு என்று சொல்லவில்லை.
அது கொள்ளை. இது நேரடியாக மக்களைப் பாதித்த கொள்ளை. ஒட்டு மொத்த நிதிச் சந்தையும் இதனால் மாற்றமடைந்தது.
இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார்? கோப் கமிட்டி தலைவர் டியூ குணசேகர இதுவரை காலம் வழங்கிய அறிக்கை நல்லது. ஆனால் இம்முறை வழங்கிய அறிக்கை பிழையானதாம்.
நான் சிறு வயதிலிருந்தே டியூ குணசேகரவை அறிவேன். அவர் ஒரு கொள்கை வாதி. சர்வதேச அனுபவங்கள் உள்ள நேர்மையானவர்.
என்னுடனும் அவர் பல தடவைகள் சண்டை பிடித்துள்ளார். அவரது அறிக்கையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? பாராளுமன்றத்துக்கு வந்து சாட்சியமளித்தவர்களது சாட்சியங்களைக் கொண்டே அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் சாட்சியமளித்தவர்களினால் அல்லவா வெளியில் வந்தது. ஐ.தே.கட்சியில் உள்ளவர்களும் கோப்பில் உள்ளார்கள். ஏன் அவர்கள் அறிக்கையை ஒளித்தார்கள்? எங்களுக்குள்ள பிரச்சினை இதுதான். இது ஒரு கொள்ளை. இது கொள்ளைக் கோஷ்டி.
Q : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஏன் உங்களுடன் இத்தனை கோபம் ?அதை அவரிடம் கேட்க வேண்டும். எனக்கு எப்படித் தெரியும்.
Q : என்றாலும் உங்களுக்கு எதிராக சந்திரிக்கா குற்றச் சாட்டுகளை முன் வைக்கிறாரே.?
நான் இவற்றை பெரிதுபடுத்திப் பார்க்கவில்லை. அவர் கூறுபவைகள் மக்களுக்கு விளங்காமல் இருப்பது போல் எனக்கும் விளங்கவில்லை.
இது எனக்குப் பிரச்சினையே இல்லை.
Q : இரு வருடங்கள் இருக்கும்போது ஏன் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றீர்கள்?
நான் நினைத்தேன் அதிகமான அமைச்சர்கள் எனக்குச் சொன்னார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எனது தேர்தலை நடாத்தும் படி அது கொள்கை ரீதியான தீர்மானம்.
Q : நீங்கள் தேர்தலில் தோற்று விட்டீர்கள். வீட்டில் ஓய்வெடுக்க முடியுமல்லவா? மீண்டும் அரசியலில் பிரவேசித்தது அதிகார மோகத்துக்கல்லவா?
ரணில் விக்கிரமசிங்க எத்தனை தடவைகள் தோற்றார். 9 தடவைகள் இம்முறை அவர் பின்கதவால் வந்தார்.
அவர் வெற்றிபெற்று பிரதமராகவில்லை அல்லவா? முன்பு அரசியல் தலைவர்கள் தோற்றுப்போய் மீண்டும் போட்டியிடவில்லையா? எத்தனை பேர் எத்தனை தடவை தோற்றுப்போய் போட்டியிட்டுள்ளார்கள்.
நான் ஒரு முறையே தோற்றுள்ளேன். இரண்டு தடவைகள் வெற்றி பெற்றுள்ளேன். ஒரு முறை தோற்றால் வீட்டில் இரு என்கிறார்கள்.
Q : எனது கேள்வி. நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வருவது நாட்டின் மீதுள்ள பற்றினாலா. உங்கள் மீதுள்ள குற்றசாட்டுகளை மூடி மறைத்துக் கொள்ளவா? அல்லது அதிகாரம் இல்லாது இருக்க முடியாததற்கா?
நான் வீட்டுக்குச் சென்று விட்டேன் அல்லவா. மெதமுலையில் இருந்தேன்.
மக்கள் தான் என்னைத் தேடி வந்தார்கள் நான் போகவில்லை அல்லவா! நான் பன்சலைகளுக்கே சென்றேன். மக்கள் தான் என்னைக் கேட்கிறார்கள். அதனால் தான் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தேன்.
Q : ஜனவரி 8 ஆம் திகதி ராஜபக் ஷ கோஷ்டியிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிவிட்டோம் என்று கூறினார்கள். மீண்டும் இந்தக் கோஷ்டியின் கைகளில் நாட்டை ஒப்படைக்கவா முயற்சிக்கிறீர்கள்?
இது முற்றும் தவறான கருத்து. அமைச்சரவையினால் தான் அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படுகிறது.
அப்படியென்றால் ஒரு கோஷ்டியினர் மாத்திரம் நாட்டை ஆட்சி செய்தார்கள் என்று குற்றம்சாட்ட முடியும். தீர்மானங்கள் அமைச்சரவையின் ஏகோபத்த முடிவுகளாகும்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமைச்சர்கள் அன்று இது பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை அல்லவா?
Q : ஆனால் அமைச்சர்களுக்கு பேசுவதற்கும் சுதந்திரமிருக்கவில்லை?
இதனை நான் மறுக்கிறேன். அப்படி பேசுவதற்கு இடமளிக்காது இருக்கமுடியுமா? நான் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரங்கள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒன்றாக இணைந்தே தீர்மானங்களை மேற்கொண்டோம்.
Q : ஆனால் ராஜபக் ஷாக்கள்!
ஆம் ராஜபக் ஷாக்கள் இருந்தார்கள் தான். ராஜபக் ஷாக்கள் அரசியல் செய்தார்கள். பஷில் அரசியலில் இருந்தார்.
கோதாபய மாத்திரம் தான் அரசியலுக்கு வெளியிலிருந்து வந்தார். அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பங்காற்றியவர்.
அவரது இயலுமையை வெளிப்படுத்தினார். அன்று கொழும்பு இருந்த நிலை என்ன?-இன்றிருக்கும் நிலை என்ன? மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மிகவேகமாக அபிவிருத்தியடைந்து முன்னேறிய சிறந்த நகரமாக உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலைமையை உருவாக்கியவர் யார்? வேலை செய்யக் கூடியவர்கள் வேலை செய்கிறார்கள்.
முடியாதவர்கள் விமர்சிக்கிறார்கள். பண்டார நாயக்காவுக்கு என்னவெல்லாம் கூறினார்கள். சந்திரிக்காவுக்கு என்ன சொன்னார்கள். குடும்ப மரம் என்கிறார்கள். மரமொன்றையும் வரைந்தார்கள். குடும்ப ஆட்சி என்கிறார்கள்.
சந்திரிக்கா நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தான் இவ்வாறு அவருக்கு எதிராக செயற்பட்டார்கள்.
ஜே.ஆருக்கும் குடும்ப ஆட்சி என்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவும் இப்படித்தான். இந்த நாட்டின் அரசியலில் குடும்பம் இருக்கிறது. இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் குடும்ப ஆட்சி இருக்கிறது.
Q : நீங்கள் இவ்வாறு பாதை அமைப்பது நாமல் ராஜபக் ஷவுக்காகவா?-
அப்படியொன்றும் இல்லை. இந்த நாட்டில் அரசியல் செய்யும் குடும்பங்கள் உள்ளன. வர்த்தக குடும்பங்கள் உள்ளன. ஆனால் என்ன வேற்றுமை என்றால் அரசியலில் தீர்மானங்களை மேற்கொள்வது மக்களே.
இப்போது எனக்கு நடந்ததும் இதுதான். என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள். என்னை போகச் சொன்னால் போய்விடுவேன் என்று நான் எப்போதும் கூறி வந்துள்ளேன்.
Q : ஆனால் ஜனவரி 9 ஆம் திகதி அதிகாலை அலரிமாளிகையில் சூழ்ச்சியொன்று நடந்ததாகவும் உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதே?
இது பொய்யான பிரசாரம். நான் அங்கு மணிக்கணக்கில் இருக்கவில்லை.
முடிவுகள் வெளியிடப்படும் முன்பே நான் அங்கிருந்து சென்று விட்டேன்.
அனைத்து தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படுவதற்கு
8 அல்லது 9 மணித்தியாலங்களுக்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டேன்.
அதிகாலை 2½ மணிக்கே நான் கூறிவிட்டேன் நான் தோற்றுவிட்டேன் என்று
Q : நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தீர்கள் எதிர்க்கட்சித் தலைவராக அமைச்சராக இரு தடவை இருந்தீர்கள் இம்முறை தேர்தலில் வென்றால் சாதாரண உறுப்பினராகவே பாராளுமன்றம் செல்வீர்கள் மாற்றத்தை விரும்புகிறீர்களா?
எனக்கு எந்த மாற்றங்களும் தெரியவில்லை பாராளுமன்றம் எனக்கு மிகவும் பழக்கமான இடம் 40 வருட எமது அரசியல் வாழ்வில் 9 வருடங்கள் தானே ஜனாதிபதி பதவி வகித்தேன். அது வரை பாராளுமன்றத்தில் அல்லவா இருந்தேன்.
Q : இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவீர்களா?
நிச்சயம். வெற்றி நிச்சயம் அன்றிருந்த நிலை அல்ல இன்று. அன்று சிறுபான்மை மக்கள் என்னுடன் இருக்கவில்லை. இன்று யாழ்ப்பாணத்திலிருந்து எத்தனை பேர் என்னுடன் உள்ளார்கள்.
அதிகமானோர் யாழ்ப்பாணத்தில் வடக்கிலிருந்து வருகிறார்கள். இன்று அவர்களுக்கு நிலைமை விளங்குகிறது. முஸ்லிம்களுக்கும் நிலைமை புரிகிறது மாற்றம் விளங்குகிறது. மாற்றங்களை ஏற்படுத்தியவர்களே இப்போது அதற்குப் புறம்பான மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்.
Q : நீங்கள் அமைச்சுப் பதவி வழங்கிய ஆனால் பிரதமர் பதவி வழங்காத மைத்திரி இன்று ஜனாதிபதி என்ன நினைக்கிறீர்கள்.
இன்று 19 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இருக்கின்றன. பாராளுமன்றத்துக்கு அதிகாரம் அதிகமாகியுள்ளது. இதனால் மைத்திரியும் நானும் இணைந்து வேலை செய்வது கடினமான காரியமல்ல.
Q : ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு கிடைக்காத சிறுபான்மை மக்களின் வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்குமா?
ஆம் உண்மையாக எனக்கெதிராக வாக்களித்த அனைத்து மக்களும் என்ன நடந்தது என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள். நாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்றும் செய்ததைச் சொல்பவர்கள் என்பதையும் மக்கள் உணர்ந்து விட்டார்கள். பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாமென நான் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
Q : நீங்கள் பிரதமர் பதவியை எதிர்பார்க்கிறீர்களா?
பிரதமரைத் தெரிவு செய்வது பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தினாலாகும். பெரும்பான்மை பலத்தை தெரிவு செய்வது மக்கள். நான் மக்கள் ஆணையையே எதிர்பார்க்கிறேன்.
Q : ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் தோற்றும் போய் 7 மாதங்கள் கடந்து விட்டன. இந்தக் கடந்து போன 7 மாதங்களும் எவ்வாறு அமைந்தன.இந்நாடு ஸ்தம்பித்து விட்டதாக எனக்குத் தெரிந்தது. அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன. வேலையின்மை அதிகரித்து விட்டது. இந்நாட்டின் வர்த்தகர்களிலிருந்து விவசாயிகள் வரை தொழிலாளர்கள் வரை அனைவரும் கஷ்டங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
Q : உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் உணர்கிறீர்களா?
உண்மையில் எனக்குள் மன அமைதியை உணர்கிறேன் என்றாலும் ஓய்வற்ற தன்மை என்றால் குறையவில்லை. முன்பெல்லாம் நான் ஓய்வின்றி செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த நிலை தற்போது சிறிது குறைந்துள்ளது.
கிராமத்தில் இருந்தேன். மக்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசினேன்.
எனது கிராமத்துக்கு மக்கள் வருகிறார்கள். நான் பன்சலைக்குச் சென்றேன். கோயிலுக்குச் சென்றேன். பள்ளிக்குச் சென்றேன். இதனால் எனது மனது தெளிவாக இருக்கிறது.
Q : மக்கள் மாற்றமொன்றையே கேட்டார்கள். அந்த மாற்றம் உங்களுக்கு கிடைத்தது?
இல்லை. அந்த மாற்றமல்ல. நாட்டு மக்களுக்கு கிடைத்த மாற்றம் எனக்குக் கிடைத்துள்ளதாக உணர்கிறேன். அதுதான் உண்மை. ஏற்பட்ட மாற்றத்தினால் தான் நாட்டின் அபிவிருத்திகள் தடைப்பட்டு விட்டன.
பழிவாங்கல் வேகம் அதிகரித்துள்ளது. நாடு அழிவுக்குள்ளாகி விட்டது.
மக்கள் இந்த மாற்றத்தை இப்போது உணர்கிறார்கள். நானும் உணர்கிறேன். மோட்டார் சைக்கிள்களை நாம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யவில்லை அல்லவா?
Q : நீங்கள் தோல்வியைத் தழுவி 7 மாதங்கள். தோல்வியைப் பற்றிப் நினைத்துப் பார்க்க இந்தக் காலம் போதுமானது. நீங்கள் உங்கள் தோல்வியை நினைத்துப் பார்த்தீர்களா?
தோல்விக்கான காரணங்கள் அனைவருக்கும் தெரிகிறது. நான் எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெற்றேன்? ஆசனங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். இது தொடர்பில் நான் திருப்தியுறுகிறேன்.
பல்வேறு இன மக்களின் மனங்களில் விதைக்கப்பட்ட தவறான கருத்துக்கள் எனது தோல்விக்கு காரணம் எனலாம். இதேவேளை வடக்கு கிழக்கு வாக்குகள் தான் காரணமாக அமைந்தது.
எனக்கு கிடைத்த வாக்குகளை நோக்கினால் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகும்.
"முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை நாங்கள் கட்டுபடுத்த முயற்சித்தோம் என்றாலும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டதால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமற் போனது. பொய்யான கருத்துகள் பிரச்சாரம் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது இலகுவான காரியமல்ல."
Q : ஏன் சிறுபான்மை மக்களின் வாக்குகளை உங்களால் பெற்றுக் கொள்ள முடியாமற் போனது?
பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள் அல்லவா? நாம் வடக்கை அபிவிருத்தி செய்தோம்.தமிழ் டயஸ்போரா தமிழ் மக்களை பெரிதும் மாற்றியிருந்தது.
யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்த நிலைப்பாட்டிலே அவர்கள் தொடர்ந்தும் இருந்தார்கள். மறந்து விடாதீர்கள். 2010இல் எனக்கு கிடைத்த வாக்குகளை விட இரு மடங்கு வடக்கிலிருந்து கிடைத்துள்ளது.
Q : முஸ்லிம் மக்கள் உங்களிலிருந்தும் தூரமாகிவிடுவதற்கு பொதுபல சேனா போன்ற அமைப்புகள் காரணமாக இருந்தன என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள்?
அதைத்தான் நான் சொன்னேன். என்னைப் பற்றி தவறான கருத்துகள் பரப்பப்பட்டன. தமது சமயத்துக்கு எதிரானவர் எமது சமூகத்துக்கு எதிரானவர் என்று அச்சமய மக்கள் நினைத்து விட்டால் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
அது அரச தலைவரையும் பாதிக்கும்.
என் மீதிருக்கும் தனிப்பட்ட பிரச்சினைக்கு அல்ல முஸ்லிம் மக்கள் என்னிடமிருந்து தூரமாகியது. தவறான பிரச்சாரங்களே காரணம்.
Q : ஏன் நீங்கள் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.?
நாங்கள் கட்டுபடுத்த முயற்சித்தோம் என்றாலும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டதால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமற் போனது.
பொய்யான கருத்துகள் பிரச்சாரம் செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது இலகுவான காரியமல்ல.
Q : நீங்கள் தோற்கடிக்கப்பட்டது உங்களது தவறினால் அல்ல என்று நம்புகிறீர்களா?
இப்படித்தான் நாங்கள் உண்மையான கதையைப் பேசுவோமே. அமெரிக்கா இப்போது சொல்கிறது..... இந்த மாற்றத்துக்கு அவர்கள் பங்குதாரர்களானார்கள் என்று. அந்நாட்டின் தலைவர்கள் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அடுத்து இங்கிலாந்து ஆட்சி மாற்றத்துக்கு அவர்களும் பங்குதாரர்கள் ஆனார்கள் என்று தெரிவிக்கிறது.
இவர்கள் பகிரங்கமாக இதைத் தெரிவித்தவர்கள். பகிரங்கமாக தெரிவிக்காத கோஷ்டியொன்றும் உள்ளது. அவ்வாறான நாடுகள் உள்ளன. இவ்வாறு பலம் பொருந்திய சக்திகள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை அமுல்படுத்தியுள்ளன.
இது எனது தவறுகளினால் நிகழ்ந்ததல்ல.
Q : நீங்கள் சீன அரசாங்கத்துடன் கொண்டிருந்த நெருங்கிய உறவின் காரணமாக உலகின் அநேக நாடுகள் உங்களுக்கு எதிரிகளாயின?
அது முற்றும் தவறான கருத்தாகும். நான் சீனாவுடன் நெருங்கிய உறவு கொள்ளவில்லை. எனது நாட்டுடனே நெருங்கியிருந்தேன். அது எனது கடமை. நான் யாருக்கு எனது கடமையை நிறைவேற்ற வேண்டும்?
எனது நாட்டுக்காகத் தானே சேவை செய்யவேண்டும்.
கடமை உணர்வுடன் இருக்க வேண்டும். எனது நாட்டு மக்களின் நன்மைக்காக நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் கடமை எனக்கிருந்தது. இந் நாட்டுக்கு அபிவிருத்திகள் தேவை என்பதை நான் உணர்ந்தேன். அபிவிருத்தி இல்லாவிட்டால் மக்களிடம் பணம் இல்லாவிட்டால் அவர்கள் வறியவர்களாகி விடுவார்கள்.
தொழிலற்றவர்களாகி விடுவார்கள் அபிவிருத்தி இல்லாவிட்டால் நாட்டுக்கு மின்சாரம் இல்லாவிட்டால் மக்கள் தெருக்களில் உள்ள குழிகளில் விழுந்து விழுந்து பயணிக்க வேண்டியேற்படும்.
தகவல் தொழிநுட்பத்தை உச்ச நிலைக்கு கொண்டு வந்தோம். இந்த அபிவிருத்திகளைத் தான் உலக நாடுகளுடன் சேர்ந்து மேற்கொண்டோம்.
Q : நீங்கள் இந்தியாவுடன் கோபித்து கொண்டீர்கள் ?
இல்லை.
இந்தியாவுடன் கோபித்துக் கொள்ளவில்லை ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். எமக்கெதிரான சக்திகள் அனைத்தும் ஒன்றாக வந்த போது அந்த சக்திகள் மேற்கொண்ட பிரச்சாரங்களுக்கு நாங்கள் சரியாக பதிலளிக்கவில்லையென்றே நான் நினைக்கிறேன். அந்த இடத்திலே எமது பலவீனம் இருக்கிறது.
எந்த நாடென்றாலும் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்துவிட முடியும்.
இந்தியா எம்முடன் கோபித்து கொண்டது என நான் ஏற்றுக் கொள்ள போவதில்லை.
தென்னிந்தியாவின் அரசியல் நிலைமைக்கு என்னால் மாறிக் கொள்ளப் முடியாது. என்றாலும், என்ன இல்லாமற் போனாலும் எனது நாட்டைக் காட்டி கொடுக்க முடியாது.
எமது நாட்டின் அபிவிருத்திக்கு இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது.
இன்று எமது நாட்டில் இந்திய சாமான்கள் அல்லவா இருக்கின்றன. இப்போதைய வெளிநாட்டுக் கொள்கையை உலகம் ஏற்று கொண்டுள்ளதா?
இன்று வரை எத்தனை நாடுகள் எம்முடன் முரண்பட்டுக் கொண்டுள்ளன? மேலைத்தேய நாடுகள் உதவிக்குவரும் என்ற நம்பிக்கையிலேயே பல நாடுகளுடன் கோபித்துக் கொண்டுள்ளனர்.
நாங்கள் பிரிவுபடாத மக்கள் பிரிவு படாத நாடு ஆனால் இன்று பிரிவுபட்ட மக்கள் பிரிவுபட்ட நாடு இதுதான் வேறுபாடு.
Q : ஜனவரி 8ஆம் திகதி தோல்விக்கு ராஜபக் ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா?
தோல்வியுற்றால் எப்போதும் எவர் மீதாவது பழி சுமத்தபடுகிறதல்லவா? 1977 இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியுற்ற போது அத்தோல்வி இலங்கரத்ன மீது சுமத்தப்பட்டது.
பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்டது. அவர்கள் தோல்விக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்கள். பச்சை பொய் சொன்னார்கள். இந்தப் பொய் மிகவும் காலதாமதமாகியே புரிந்தது. அடுத்தவர்கள் செய்த தவறுகளை இப்போது எவரும் கூறுவதில்லை
இருக்கும்போது எல்லோருக்கும் ஏசுவார்கள். தோற்றதன் பின்பு ஒருவர் அல்லது இருவரை மாத்திரம் தோல்விக்கு காரணமாக மையப்படுத்திக் கொள்வார்கள். காய்க்கும் மரத்துக்குதானே கல் எறியப்படும்.
இது உலகின் சுபாவம்.
Q : நீங்கள் தேசிய சொத்துக்களை களவெடுத்திருக்கலாம் கோடிக்கணக்கான பணத்தை வெளிநாட்டில் வைப்பிலிட்டீர்கள் என்று குற்றச்சாட்டு இருக்கிறது.
பைல் கட்டுக்களை கொண்டு வந்தல்லவா காட்டினார்கள். காட்டிய அந்த பைல் கட்டுகளிலிருந்து தேடிக் கொள்ள முடியுமல்லவா? வங்கிகளிலிருந்து தேடி கண்டு பிடித்துக் கொள்ளலாம் அல்லவா?
இவர்கள் கூறுவது பில்லியன் 18 ஐப் பற்றியல்லவா? 18 பில்லியன் அல்ல குறைந்தது. 1.8 பில்லியனை தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொல்லுங்கள்.
அதிகம் தேவையில்லை 10 டொலர் தேடிக் கொண்டு வரச் சொல்லுங்கள் இது தான் அரசியல் சேறு பூசல் என்று சொல்லுவது.
Q : வெளிநாட்டிலுள்ள சொத்துக்களை தேடிக் கண்டுபிடிக்க நீண்ட காலம் செல்லும் என வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளர்?
இது பச்சை பொய். உலகில் எந்த கணக்கையும் எந்த இடத்திலிருந்தும் பார்த்துக் கொள்ளும் வகையில் இன்று தொழிநுட்பம் முன்னேறியுள்ளது. அமெரிக்காவுக்குத் தெரியாமல் களவில் டொலரில் கொடுக்கல் வாங்கல் செய்ய செய்ய முடியுமா?
ஒரு பொத்தானை அழுத்திக் கண்டுபிடிக்கலாம். இவர்கள் எனது பெயர் இருப்பதாக கூறி சுவீஸ் வங்கி அதிகாரிகளை அழைத்து வந்தார்கள். பெயர் பட்டியலை டைம்ஸ் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள்.
அந்தப் பட்டியல் என தல்ல என்னுடன் தொடர்புபட்டவர்களதோ எனது பகுதியைச் சேர்ந்தவர்களதோ பெயர் இருக்கவில்லை. பெயரைச் சொல்லி மனிதர்கள் மீது சேறு பூசுவது இலகுவானது. எனக்கு வேறு எதுவும் சொல்ல முடியாதல்லவா?
அபிவிருத்தி செய்யவில்லை என்று கூறமுடியாது. பாதைகள் அமைத்தது பிழையானது என்றும் சொல்ல முடியாது. அதனால் தான் இவ்வாறு சேறு பூசுகிறார்கள்.
Q : ஆனால் அபிவிருத்தி வேலைகளிலும் பாதை நிர்மாணங்களிலும் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு இருக்கிறதே?
அதைத்தான் நான் சொல்ல முயற்சித்தேன். செய்து முடித்த நல்ல வேலைகளை தவறானது எனக் கூற முடியாது. ஆனால் செய்த நல்ல வேலைக்குள் அவ்வாறனவை (கமிஷன்) இருந்ததாக கூறுகிறார்கள்.
இப்படிக் கூறித்தான் மக்களை தவறான வழிக்கு இட்டுச் சென்றார்கள். மத்திய வங்கியின் பிணைமுறி கொள்ளையைப் பாருங்களேன். அது ஒரு கொள்ளை.
அது களவு அல்ல. நான் அதை களவு என்று சொல்லவில்லை.
அது கொள்ளை. இது நேரடியாக மக்களைப் பாதித்த கொள்ளை. ஒட்டு மொத்த நிதிச் சந்தையும் இதனால் மாற்றமடைந்தது.
இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார்? கோப் கமிட்டி தலைவர் டியூ குணசேகர இதுவரை காலம் வழங்கிய அறிக்கை நல்லது. ஆனால் இம்முறை வழங்கிய அறிக்கை பிழையானதாம்.
நான் சிறு வயதிலிருந்தே டியூ குணசேகரவை அறிவேன். அவர் ஒரு கொள்கை வாதி. சர்வதேச அனுபவங்கள் உள்ள நேர்மையானவர்.
என்னுடனும் அவர் பல தடவைகள் சண்டை பிடித்துள்ளார். அவரது அறிக்கையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? பாராளுமன்றத்துக்கு வந்து சாட்சியமளித்தவர்களது சாட்சியங்களைக் கொண்டே அறிக்கை தயாரிக்கப்பட்டது.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் சாட்சியமளித்தவர்களினால் அல்லவா வெளியில் வந்தது. ஐ.தே.கட்சியில் உள்ளவர்களும் கோப்பில் உள்ளார்கள். ஏன் அவர்கள் அறிக்கையை ஒளித்தார்கள்? எங்களுக்குள்ள பிரச்சினை இதுதான். இது ஒரு கொள்ளை. இது கொள்ளைக் கோஷ்டி.
Q : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஏன் உங்களுடன் இத்தனை கோபம் ?அதை அவரிடம் கேட்க வேண்டும். எனக்கு எப்படித் தெரியும்.
Q : என்றாலும் உங்களுக்கு எதிராக சந்திரிக்கா குற்றச் சாட்டுகளை முன் வைக்கிறாரே.?
நான் இவற்றை பெரிதுபடுத்திப் பார்க்கவில்லை. அவர் கூறுபவைகள் மக்களுக்கு விளங்காமல் இருப்பது போல் எனக்கும் விளங்கவில்லை.
இது எனக்குப் பிரச்சினையே இல்லை.
Q : இரு வருடங்கள் இருக்கும்போது ஏன் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றீர்கள்?
நான் நினைத்தேன் அதிகமான அமைச்சர்கள் எனக்குச் சொன்னார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு எனது தேர்தலை நடாத்தும் படி அது கொள்கை ரீதியான தீர்மானம்.
Q : நீங்கள் தேர்தலில் தோற்று விட்டீர்கள். வீட்டில் ஓய்வெடுக்க முடியுமல்லவா? மீண்டும் அரசியலில் பிரவேசித்தது அதிகார மோகத்துக்கல்லவா?
ரணில் விக்கிரமசிங்க எத்தனை தடவைகள் தோற்றார். 9 தடவைகள் இம்முறை அவர் பின்கதவால் வந்தார்.
அவர் வெற்றிபெற்று பிரதமராகவில்லை அல்லவா? முன்பு அரசியல் தலைவர்கள் தோற்றுப்போய் மீண்டும் போட்டியிடவில்லையா? எத்தனை பேர் எத்தனை தடவை தோற்றுப்போய் போட்டியிட்டுள்ளார்கள்.
நான் ஒரு முறையே தோற்றுள்ளேன். இரண்டு தடவைகள் வெற்றி பெற்றுள்ளேன். ஒரு முறை தோற்றால் வீட்டில் இரு என்கிறார்கள்.
Q : எனது கேள்வி. நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வருவது நாட்டின் மீதுள்ள பற்றினாலா. உங்கள் மீதுள்ள குற்றசாட்டுகளை மூடி மறைத்துக் கொள்ளவா? அல்லது அதிகாரம் இல்லாது இருக்க முடியாததற்கா?
நான் வீட்டுக்குச் சென்று விட்டேன் அல்லவா. மெதமுலையில் இருந்தேன்.
மக்கள் தான் என்னைத் தேடி வந்தார்கள் நான் போகவில்லை அல்லவா! நான் பன்சலைகளுக்கே சென்றேன். மக்கள் தான் என்னைக் கேட்கிறார்கள். அதனால் தான் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தேன்.
Q : ஜனவரி 8 ஆம் திகதி ராஜபக் ஷ கோஷ்டியிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிவிட்டோம் என்று கூறினார்கள். மீண்டும் இந்தக் கோஷ்டியின் கைகளில் நாட்டை ஒப்படைக்கவா முயற்சிக்கிறீர்கள்?
இது முற்றும் தவறான கருத்து. அமைச்சரவையினால் தான் அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படுகிறது.
அப்படியென்றால் ஒரு கோஷ்டியினர் மாத்திரம் நாட்டை ஆட்சி செய்தார்கள் என்று குற்றம்சாட்ட முடியும். தீர்மானங்கள் அமைச்சரவையின் ஏகோபத்த முடிவுகளாகும்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமைச்சர்கள் அன்று இது பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை அல்லவா?
Q : ஆனால் அமைச்சர்களுக்கு பேசுவதற்கும் சுதந்திரமிருக்கவில்லை?
இதனை நான் மறுக்கிறேன். அப்படி பேசுவதற்கு இடமளிக்காது இருக்கமுடியுமா? நான் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரங்கள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஒன்றாக இணைந்தே தீர்மானங்களை மேற்கொண்டோம்.
Q : ஆனால் ராஜபக் ஷாக்கள்!
ஆம் ராஜபக் ஷாக்கள் இருந்தார்கள் தான். ராஜபக் ஷாக்கள் அரசியல் செய்தார்கள். பஷில் அரசியலில் இருந்தார்.
கோதாபய மாத்திரம் தான் அரசியலுக்கு வெளியிலிருந்து வந்தார். அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பங்காற்றியவர்.
அவரது இயலுமையை வெளிப்படுத்தினார். அன்று கொழும்பு இருந்த நிலை என்ன?-இன்றிருக்கும் நிலை என்ன? மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். மிகவேகமாக அபிவிருத்தியடைந்து முன்னேறிய சிறந்த நகரமாக உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலைமையை உருவாக்கியவர் யார்? வேலை செய்யக் கூடியவர்கள் வேலை செய்கிறார்கள்.
முடியாதவர்கள் விமர்சிக்கிறார்கள். பண்டார நாயக்காவுக்கு என்னவெல்லாம் கூறினார்கள். சந்திரிக்காவுக்கு என்ன சொன்னார்கள். குடும்ப மரம் என்கிறார்கள். மரமொன்றையும் வரைந்தார்கள். குடும்ப ஆட்சி என்கிறார்கள்.
சந்திரிக்கா நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தான் இவ்வாறு அவருக்கு எதிராக செயற்பட்டார்கள்.
ஜே.ஆருக்கும் குடும்ப ஆட்சி என்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவும் இப்படித்தான். இந்த நாட்டின் அரசியலில் குடும்பம் இருக்கிறது. இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் குடும்ப ஆட்சி இருக்கிறது.
Q : நீங்கள் இவ்வாறு பாதை அமைப்பது நாமல் ராஜபக் ஷவுக்காகவா?-
அப்படியொன்றும் இல்லை. இந்த நாட்டில் அரசியல் செய்யும் குடும்பங்கள் உள்ளன. வர்த்தக குடும்பங்கள் உள்ளன. ஆனால் என்ன வேற்றுமை என்றால் அரசியலில் தீர்மானங்களை மேற்கொள்வது மக்களே.
இப்போது எனக்கு நடந்ததும் இதுதான். என்னை வீட்டுக்கு அனுப்பினார்கள். என்னை போகச் சொன்னால் போய்விடுவேன் என்று நான் எப்போதும் கூறி வந்துள்ளேன்.
Q : ஆனால் ஜனவரி 9 ஆம் திகதி அதிகாலை அலரிமாளிகையில் சூழ்ச்சியொன்று நடந்ததாகவும் உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதே?
இது பொய்யான பிரசாரம். நான் அங்கு மணிக்கணக்கில் இருக்கவில்லை.
முடிவுகள் வெளியிடப்படும் முன்பே நான் அங்கிருந்து சென்று விட்டேன்.
அனைத்து தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படுவதற்கு
8 அல்லது 9 மணித்தியாலங்களுக்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டேன்.
அதிகாலை 2½ மணிக்கே நான் கூறிவிட்டேன் நான் தோற்றுவிட்டேன் என்று
Q : நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தீர்கள் எதிர்க்கட்சித் தலைவராக அமைச்சராக இரு தடவை இருந்தீர்கள் இம்முறை தேர்தலில் வென்றால் சாதாரண உறுப்பினராகவே பாராளுமன்றம் செல்வீர்கள் மாற்றத்தை விரும்புகிறீர்களா?
எனக்கு எந்த மாற்றங்களும் தெரியவில்லை பாராளுமன்றம் எனக்கு மிகவும் பழக்கமான இடம் 40 வருட எமது அரசியல் வாழ்வில் 9 வருடங்கள் தானே ஜனாதிபதி பதவி வகித்தேன். அது வரை பாராளுமன்றத்தில் அல்லவா இருந்தேன்.
Q : இம்முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவீர்களா?
நிச்சயம். வெற்றி நிச்சயம் அன்றிருந்த நிலை அல்ல இன்று. அன்று சிறுபான்மை மக்கள் என்னுடன் இருக்கவில்லை. இன்று யாழ்ப்பாணத்திலிருந்து எத்தனை பேர் என்னுடன் உள்ளார்கள்.
அதிகமானோர் யாழ்ப்பாணத்தில் வடக்கிலிருந்து வருகிறார்கள். இன்று அவர்களுக்கு நிலைமை விளங்குகிறது. முஸ்லிம்களுக்கும் நிலைமை புரிகிறது மாற்றம் விளங்குகிறது. மாற்றங்களை ஏற்படுத்தியவர்களே இப்போது அதற்குப் புறம்பான மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்.
Q : நீங்கள் அமைச்சுப் பதவி வழங்கிய ஆனால் பிரதமர் பதவி வழங்காத மைத்திரி இன்று ஜனாதிபதி என்ன நினைக்கிறீர்கள்.
இன்று 19 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இருக்கின்றன. பாராளுமன்றத்துக்கு அதிகாரம் அதிகமாகியுள்ளது. இதனால் மைத்திரியும் நானும் இணைந்து வேலை செய்வது கடினமான காரியமல்ல.
Q : ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு கிடைக்காத சிறுபான்மை மக்களின் வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்குமா?
ஆம் உண்மையாக எனக்கெதிராக வாக்களித்த அனைத்து மக்களும் என்ன நடந்தது என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள். நாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்றும் செய்ததைச் சொல்பவர்கள் என்பதையும் மக்கள் உணர்ந்து விட்டார்கள். பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாமென நான் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
Q : நீங்கள் பிரதமர் பதவியை எதிர்பார்க்கிறீர்களா?
பிரதமரைத் தெரிவு செய்வது பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்தினாலாகும். பெரும்பான்மை பலத்தை தெரிவு செய்வது மக்கள். நான் மக்கள் ஆணையையே எதிர்பார்க்கிறேன்.

