சம்பிரதாயங்களுக்கு புறம்பாக ஜனவரி 8ம் திகதி பிரதமர் நியமிக்கப்பட்டார்!– டலஸ் அழகப்பெரும
1948ம் ஆண்டின் பின்னர் சம்பிரதாயங்களுக்கு புறம்பான வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர்...
https://kandyskynews.blogspot.com/2015/07/8_21.html
1948ம் ஆண்டின் பின்னர் சம்பிரதாயங்களுக்கு புறம்பான வகையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டின் பிரதமர் நியமிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் சம்பிதாயபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவார்.
எவரேனும் மக்களின் ஆணைக்குப் புறம்பாக செயற்பட்டால் அரசியல் சுனாமியாக மாறும் என டலஸ் அழகப்பெரும எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

