சீனாவிடம் பாரிய போர்க்கப்பலை வாங்குகிறது இலங்கை
சீனாவிடம் இருந்து பாரிய போர்க்கப்பல் ஒன்றை வாங்குவது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த ...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_700.html
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தின் போதே, சீனாவிடம் இருந்து பாரிய போர்க்கப்பல் ஒன்றை கொள்வனவு செய்வது குறித்து, சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், எந்த வகையான போர்க்கப்பல் வாங்கப்படவுள்ளது என்பது பற்றியோ, அதன் விலை தொடர்பான விபரங்களோ அல்லது எப்போது கொள்வனவு செய்யப்படும் என்பது பற்றிய எந்த தகவலையும் இலங்கை கடற்படை வெளியிடவில்லை.

