பேருவெல, அளுத்கம இன வன்முறைக்கு சரியாக ஒருவருடத்தின் பின்னர் நேற்று ஞானசார தேரர் விடுத்த சூளுரை.

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. !!!! ஞானசார தேரர்...


வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை ஒழித்துக்கட்ட எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது. !!!!

ஞானசார தேரர் சூளுரை !

ஏ எம் எம் முஸம்மில்- பதுளை

( பேருவெல அளுத்கம இன வன்முறைகள் நடைபெற்று சரியாக ஒருவருடகால பூர்த்தியில்ஞானசார தேரர் மேற்படி சூளுரை விடுத்துள்ளார் ! அவ் வன்முறைகளுக்கு பொதுபல சேனா பௌத்த தீவீரவாத அமைப்பின் செயலாளார் ஞான சார தேரர்ரின் அளுத்கம கூட்டத்தின் உரை அடிப்படை காரணியாக இருந்தது.இன்று மீண்டும் அதே பாணியில் இந் நாட்டு தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கியுள்ளார்.

இந் நாட்டில் மீண்டுமொரு இனக் கலவரத்தை தூண்டிவிட இந்த இனவாத அமைப்பு செயல் படுவதாக அறுதியிட்டுக் கூறலாம். நல்லாட்சியின் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து இவர்களின் கொட்டத்தை அடக்க முன்வராவிட்டால் இந் நாட்டில் மீண்டும் மீண்டும் இனக்கலவரங்களை துரிதமாக எதிர் பார்க்கலாம்,)

இணைய தொடர்பு :-




பொதுபல சேனா பௌத்த தீவீரவாத அமைப்பின் செயலாளார் ஞான சார தேரர்இன்றைய ஊடக சந்திப்பில் கூறியவற்றை தொடர்ந்து கேளுங்கள்……………………


இன்று வடக்கில் நடைபெறும் விடயங்களுக்கு எதிராக, வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை இல்லாதொழிக்க எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது, இதை செய்துகாட்ட எங்களால் முடியும். எம்மால் முடியாது என்ற காரணத்தால் நாம் சும்மா இருக்க வில்லை. இதை செய்துவிட எமக்கு தேவைக்கும் அதிகமான பலம் உள்ளது. இதை நாங்கள் செய்து விட துணிந்துவிட்டால் நாட்டில்என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள். தமிழர்கள் இந்த ஜனாதி மைத்ரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்த வோட்டு போட்ட ஒரே காரணத்திற்காக இந்த நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க முடியாது. ஆணுமல்லாத பெண்ணுமல்லாத பொம்மைகள் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறும் என்பது நாம் எதிர்பார்த்ததுதான்.

பண்டாரநாயக்கர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்களில்லை. இவர்கள் இந்திய வம்சாவளியை கொண்டவர்கள் (PRONOUNCE AS PANDARA NAYAGAM – NOT BANDARA NAYAKA ). இந்த பண்டார நாயக்கர்கள் சுமார் மூன்று பரம்பரைகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள்.

இவர்கள் தமிழர்கள். அதனால் தான் நாங்கள் பிரபாகரனுக்கு ஏதாவது சொன்னால் சந்திரிக்காவுக்கு கோபம் வருகின்றது. ஆகவே தான் நங்கள் சொன்னோம் இவர் பிரபாகரனின் மூத்த சகோதரி என்று. இவர்கள் எப்பொழுதும் ஹைப்ரிட் வளவ் காரர்களாக இருந்து கொண்டு வெள்ளையர்களுக்கு வால்பிடித்தவர்கள் .

ஆகவே இந்த விதவை சந்திரிகா பண்டார நாயக தனது கீழ்த்தரமான வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். சும்மா ஆட்டம் போட வரக்கூடாது என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றோம். விதவையான சந்திரிக்கா மீண்டும் திருமணமொன்றை நடத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறிக் கொள்கின்றோம்.

Related

தலைப்பு செய்தி 6192772493400132910

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item