ஏற்றுக் கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும்.!!
அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதன...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_192.html

சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தவறினால் அரசாங்கத்தை விட்டும், அமைச்சுப் பதவியை விட்டும் விலகத்தயார்.சிறுபான்மை சமூகங்கள் தொடர்பில் நிறைவேற்றப்பட வேண்டிய சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தொடர்ந்தும் நம்புகின்றேன்.
நுவரெலியா மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான ஆசனங்களின் எண்ணிக்கை நான்காக அறிவிக்கப்பட வேண்டும்.கொழும்பு, ஹங்குராங்கெத்த, வலபனை, கண்டி, பதுளை ஆகிய தொகுதிகள் பல் ஆசன முறைமையாக அமைய வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

