விமானப் பொதிகளின் ஊடாக போதை மாத்திரைகள் கடத்தல்?

விமானப் பொதிகளின் ஊடாக பாரியளவில் போதை மாத்திரைகள் நாட்டுக்குள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப் பொதிகளின் ஊடாக இலங்கைக்கு அனுப...

விமானப் பொதிகளின் ஊடாக பாரியளவில் போதை மாத்திரைகள் நாட்டுக்குள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானப் பொதிகளின் ஊடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள் மற்றும் பொதிகளில் மிகவும் நுட்பமான முறையில்
போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக தபால் திணைக்கள சிரேஸ்ட அதிகாரியொருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இவ்வாறு பல்வேறு போதை மாத்திரைகள் கடத்தப்படுகின்றன.

வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் திட்டமிட்ட கும்பல் ஒன்று இவ்வாறு போதை மாத்திரைகளை கடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் பல பகுதிகளது பொய் பெயர்கள் மற்றும் போலி முகவரிகளைப் பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக தருவிக்கப்படும் போதைப் மாத்திரைகள் மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 7063910303276868877

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item