அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகமே சுங்கப் பணிப்பாளர் பதவி விலகக் காரணம்: ஜேவிபி
அரசாங்க அமைச்சர் ஒருவரின் செல்வாக்கு காரணமாகவே சுங்க பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகநேரிட்டது என்று ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளத...
https://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_527.html
இது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள இந்த அமைச்சரின் அழுத்தம் காரணமாகவே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது என்று செய்தியாளர் மத்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்படுகின்ற முறுகல்கள் காரணமாக பாரிய பொருளாதார சிக்கல்கள் ஏற்படும்.
இதன்காரணமாக நாடு மக்களும் பாதிப்படைவதாக ஹந்துன்நெந்தி குறிப்பிட்டுள்ளார்.

