கடும் கோபத்துடன் பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர் கொண்ட சந்திரிக்கா
பாதுகாப்புச் செயலாளர் பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அது குறித்து தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_392.html
கடந்த வாரம் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் வெளிநாட்டுக்கு செல்ல உதவும் வகையில் கடிதத்தை வழங்கியமை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விசாரணை நடத்தி வரும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்னவுக்கு விடுமுறை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் செய்துள்ள இந்த காரியங்கள் சரியானதல்ல எனவும் அவர் வழங்கிய கடிதத்தில் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் வெளிநாடு செல்வது அத்தியவசியமானது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்திக்கு பஸ்நாயக்க 6 மாதங்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளதுடன் அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.
இந்த விடயங்கள் காரணமாக கடந்த வாரம் கூடிய தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் பெரும் பரப்பரப்பு நிலவியது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோபமாக பேசியுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல உதவும் வகையில் கடிதம் ஒன்றை வழங்கியமை தொடர்பில் சந்திரிக்கா, பாதுகாப்புச் செயலாளரிடம் வினவியுள்ளார்.
அத்துடன் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றை தயார் செய்வது பாதுகாப்புச் செயலாளரின் பணியல்ல எனவும் சந்திரிக்கா, பஸ்நாயக்கவிடம் கூறியுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல உதவும் வகையில் கடிதம் ஒன்றை வழங்கியமை தொடர்பில் சந்திரிக்கா, பாதுகாப்புச் செயலாளரிடம் வினவியுள்ளார்.
அத்துடன் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றை தயார் செய்வது பாதுகாப்புச் செயலாளரின் பணியல்ல எனவும் சந்திரிக்கா, பஸ்நாயக்கவிடம் கூறியுள்ளார்.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரது சட்டத்தரணி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூன்று பக்கங்களை கொண்ட கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளார்.

