முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணியத் தடை
இலங்கைத் தீவில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ந...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_20.html
இலங்கைத் தீவில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை மார்ச் 21ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முழுமையாக தலைக்கவசம் அணிந்து செல்பவர்களால் அதிகம் குற்றச் செயல்கள் புரியப்படுவதனால் அதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

