ரணிலைத் தோற்கடித்து புதிய அரசாங்கத்தை நிறுவுவோம்! - சூளுரைக்கிறார் நிமால்சிறிபால டி சில்வா

பொதுத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை நிறுவப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரி...

Nimal_Siripala_பொதுத்தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை நிறுவப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் பெப்ரவரி 14ம் திகதியன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக நீடிக்கும் நிலையில், பொதுத்தேர்தலின் பின்னர் அவர் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரையே பிரதமராக நியமிப்பார்.

இதேவேளை ஊவா மாகாணசபையில் முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.அத்துடன் ஊழல்களில் தொடர்புடையவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவர். கடந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் எனக்கும் கூட சரியான அந்தஸ்து தரப்படவில்லை. ஆனாலும் நான் கட்சியை விட்டு ஓடிவிடவில்லை. எந்தப் பதவி என்றாலும் கட்சிக்காக தொடர்ந்து போராடுவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Related

இலங்கை 2359805967881154107

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item