ரணில் விடுக்கும் சவால்களில் அர்த்தமில்லை! – டலஸ் அழகப்பெரும
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சவால்கள் அர்த்தமற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_448.html
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சவால்கள் அர்த்தமற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் ரணில் விக்ரமசிங்க இவ்வாறான சவால்களை விடுத்துள்ளார். அவரது வாழ்க்கையில் இருபது ஆண்டுகள் இவ்வாறான சவால்களை விடுத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடாமல், ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டிருந்தால் என்ன நேர்ந்திருக்கும். இந்த விடயம் ரணில் விக்ரமசிங்கவின் மனச்சாட்சிக்கு நன்றாகத் தெரியும்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சவால்கள் வெறும் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


