கோத்தபாயவுக்கு லஞ்சம் கொடுத்து பதவி வாங்கிய பொன்சேகா?
இராணுவத் தளபதி பதவியை பெற்றுக்கொள்ள சரத் பொன்சேகா, கோத்தபாயவிற்கு லஞ்சம் கொடுத்தாரா என ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது. அரச அதிகாரியா...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_115.html
இராணுவத் தளபதி பதவியை பெற்றுக்கொள்ள சரத் பொன்சேகா, கோத்தபாயவிற்கு லஞ்சம் கொடுத்தாரா என ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.
அரச அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சரத் பொன்சேகா நன்கொடையாக பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராபஜக்ஸவின் பிரச்சாரப் பணிகளுக்காக சரத் பொன்சேகா ஆறு லட்சம் ரூபா பணம் வழங்கியதாக அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார்.
சுயாதீன தொலைக்காட்சிக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமையவே தாம் இந்த பணத்தை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராபஜக்ஸவுடன் நட்பு கொண்டிருந்த போதிலும், கோதபாய ராஜபக்ஸவுடன் தொழில் ரீதியான உறவே காணப்பட்டது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
கோதபாய ராஜபக்ஸ தமக்கு பின்னரே இராணுவத்தில் இணைந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு கிறிஸ்மஸ் காலத்தில் அமெரிக்காவில் வைத்து முதல் தடவையாக கோதபாயவை தாம் சந்தித்ததாகவும் அப்போது இந்தளவு ஆளுமை அவரிடம் இருக்கவில்லை எனவும் சரத் பொன்சேகா செவ்வியில் தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்கு நிதி உதவிகளை வழங்கி அதன் ஊடாகவே சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக நியமனம் பெற்றுக்கொண்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.

