ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ச இராஜினாமா
நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியும் தனது சகோதரருமான மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்று ஸ்ரீலங்கா சுதந்திர கட...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_532.html

நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியும் தனது சகோதரருமான மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் ஏற்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தான் விலகிக்கொள்வதாக பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுற்று கடந்த ஒரு வாரமாக அமைதியாக இருந்த பசில் ராஜபக்ச சில மணி நேரங்களின் முன் தான் நாட்டை விட்டு தப்பியோடவில்லையெனவும் அறிவித்திருந்ததோடு தற்போது தனது இராஜினாமா குறித்த அறவிப்பையும் சு.க ஊடகப் பிரிவு ஊடாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

