கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு! யாழ். வடமராட்சி கிழக்கில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட...

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு, தாளையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


நேற்று திங்கட்கிழமை இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்ட போது, மனைவியின் கழுத்தை கணவன் அறுத்துக் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 40 வயதான சிவபாலன் மற்றும் அவரது மனைவியான 40 வயதான சுபாஷினி என தெரியவருகின்றது.

சம்பவத்தின் போது சுபாஷினியின் தாயாரும் உடனிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Related

தலைப்பு செய்தி 8699521554064542729

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item