ரோஹிங்கியா முஸ்லிம் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் : 17 நாடுகள் கொண்ட உச்சி மாநாட்டில் கடும் எச்சரிக்கை.....!!
ரோஹிங்கியா முஸ்லிம் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் : 17 நாடுகள் கொண்ட உச்சி மாநாட்டில் கட...
http://kandyskynews.blogspot.com/2015/05/17.html
ரோஹிங்கியா முஸ்லிம் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் : 17 நாடுகள் கொண்ட உச்சி மாநாட்டில் கடும் எச்சரிக்கை.....!!
பர்மாவில் நடைபெற்று வரும் முஸ்லிம் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று 17 நாடுகள் பங்கு கொண்ட உச்சி மாநாட்டில் கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழு விவரம் பின் வருமாறு....
உலகையே உலுக்கிய மியான்மர் இனப்படுகொலை தொடர்பாக தாய்லாந்தில் 17 நாடுகளின் தலைவர்கள் பங்கு கொண்ட உச்சி மாநாடு நடைபெற்றது.
புத்தமத வெறியர்கள் அரங்கேற்றிவரும் பயங்கரவாதத்திற்கு மியான்மர் அரசு துணை போனதால் மியான்மரை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று சில நாடுகள் கேட்டுக்கொண்டன.
இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய மியான்மர் பிரதிநிதிகள்....
எங்கள் நாட்டில் நடந்தது மதக்கலவரம், அதற்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்று பேசினர்.
இதனால் ஆவேசம் அடைந்த இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட 17 நாடுகளும் மியான்மருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு மியான்மர் அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்,
ரோஹிங்கியாவில் நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்தி நாட்டை விட்டு வெளியேறிய முஸ்லிம்களை திரும்பவும் அழைத்து கொள்ளவில்லை என்றால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் எச்சரித்தன.
தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி



Sri Lanka Rupee Exchange Rate