இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர்களின் அறிமுக ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் தமது அறிமுக ஆவணங்களை வழங்கியுள்ளனர். இது த...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_811.html
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் தமது அறிமுக ஆவணங்களை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஜப்பான் நாட்டின் தூதுவரும், கென்யா, கானா, சிங்கப்பூர் மற்றும் சீசெல்ஸ் அரசாங்கத்துக்கான உயர்ஸ்தானிகர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
அறிமுக ஆவணங்களை வழங்கியதன் பின்னர் புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஜப்பான் நாட்டின் தூதுவரும், கென்யா, கானா, சிங்கப்பூர் மற்றும் சீசெல்ஸ் அரசாங்கத்துக்கான உயர்ஸ்தானிகர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
அறிமுக ஆவணங்களை வழங்கியதன் பின்னர் புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இதன் போது தமது நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்குவதற்கு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

