முஸ்லிம் வர்த்தகரை கொன்று கொள்ளையிட்டோர் சிக்கினர்

ஒருவர் கைது; நால்வர் தப்பியோட்டம் மினு­வாங்­கொடை நகரில் கடந்த ரமழான் மாதத்தில் நோன்பு துறக்கும் போது முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வரைக் கொலை செய...

ஒருவர் கைது; நால்வர் தப்பியோட்டம்
மினு­வாங்­கொடை நகரில் கடந்த ரமழான் மாதத்தில் நோன்பு துறக்கும் போது முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வரைக் கொலை செய்­து­விட்டு அவ­ரது நகைக் கடையை கொள்­ளை­ய­டித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக கரு­தப்­படும் கொள்ளைக் கோஷ்­டி­யொன்று சீதுவை பகு­தியில் உள்ள கட்­டு­நாயக்க -,கொழும்பு அதி­வேக பாதை நுழை­வா­யி­லுக்கு அருகில் வைத்து தம்மை சோதனை செய்ய வந்த பொலிஸார் இரு­வரைத் தாக்­கி­விட்டு அவர்­களின் மோட்டார் சைக்­கிள்­களில் தப்பிச் சென்­றுள்­ளனர்.



இச்­சம்­பவம் நேற்று முன் தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய கொள்ளைக் கோஷ்­டியைச் சேர்ந்த ஒருவர் பிர­தே­சத்தின் ஓடை ஒன்றின் அருகே ஒளிந்­தி­ருந்த போது விஷேட தேடுதல் வேட்­டையில் ஈடு­பட்ட பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் அன்­றி­ரவே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

 நேற்று முன் தினம் கட்­டு­நா­யக்க - கொழும்பு  அதி­வேகப் பாதையின் சீதுவை நுழை­வா­யிலை அண்­மித்த பகு­தியில் கார் ஒன்று சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் நிறுத்­தப்­பட்­டுள்­ளதை அப்­பி­ர­தே­சத்தால் இரு மோட்டார் சைக்­கிள்­களில் சென்ற பொலிஸார் அவ­தா­னித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அந்த இடத்­துக்கு சென்­றுள்ள பொலிசார் அங்­கி­ருந்த ஐவ­ரி­னதும் தேசிய அடை­யாள அட்­டை­களை சோத­னைக்­காக கோரி­யுள்­ளனர்.
இதன் போது அந்த ஐவரும் சேர்ந்து அவ்­விரு பொலி­ஸா­ரையும் பொல்­லு­களால் தாக்­கி­யுள்­ள­துடன் காருக்குள் இருந்து இரு துப்­பாக்­கி­க­ளையும் எடுத்து அவ்­வி­ரு­வ­ரையும் அச்­சு­றுத்தி விட்டு பொலிஸார் இரு­வரும் வந்த இரு மோட்டார் சைக்­கிள்­க­ளையும் எடுத்­துக்­கொண்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

இந் நிலையில் சம்­பவம் தொடர்பில் சீதுவை பொலிஸ் நிலை­யத்­துக்கு தகவல் வழங்­கப்­ப­டவே ஸ்தலம் விரைந்த பொலிஸார் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் துணை­யுடன் விஷேட விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­தனர். இதன் போது பிர­தே­சத்தின் ஓடைப் பகுதி ஒன்றின் அருகே மறைந்­தி­ருந்த சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டார்.

இந் நிலையில் ஏனைய சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதன் பொருட்டு விஷேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அந்த ஐவரும் கொள்­ளையில் ஈடு­ப­டவே கார் ஒன்றை வாட­கைக்கு பெற்று அதன் இலக்கத் தகட்டை மாற்றிக் கொண்­டி­ருந்­துள்­ள­மையும் இதன் போதே சிவில் உடையில் இருந்த பொலிஸார் சந்­தேகம் கொண்டு அது தொடர்பில் சோதனை செய்ய சென்ற போது சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நபர்கள் தப்பிச் சென்ற இரு பொலி­ஸா­ருக்கு சொந்­த­மான மோட்டார் சைக்­கிள்­களும் மினு­வாங்­கொடை பிர­தே­சத்தில் கைவி­டப்­பட்ட நிலையில் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

மேல­திக விசா­ர­ணை­களில் இந்த கொள்ளைக் கும்­ப­லா­னது வாக­னங்­களை வாட­கைக்கு பெற்று இலக்கத் தக­டு­களை மாற்றி பல கொள்­ளை­களில் ஈடு­பட்­டுள்­ள­மையும் அண்­மையில் மினு­வாங்­கொ­டையில் நோன்பு துறக்கும் போது நகைக் கடை உரிமையாளரை சுட்டுக்கொன்று விட்டு கொள்ளையிட்ட சம்பவமும் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Related

இலங்கை 9143165480306565616

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item