மஹிந்தவை விரட்டியடிப்போம்! யாழில் சம்பிக்க ரணவக்க முழக்கம்
மஹிந்தவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளதாக அமைச்சர் சம்பிக்...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_719.html
மஹிந்தவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் இந்த நடவடிக்கைக்காக மக்கள் தக்க பதிலடியை வழங்குவார்கள் என்றும் சம்பிக்க எச்சரித்துள்ளார்.
வட பிராந்தியத்திற்கான மின்சார சபை தலைமை அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வின்போது யாழ்ப்பாணத்தில் வைத்து அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலம் சிறந்தமைய வேண்டுமெனில் இளைஞர்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். நாட்டில் சமாதான நிலமை தொடர வேண்டும்.
நல்லாட்சி, சம உரிமை, சமாதானத்தை மையப்படுத்திய புதிய அரசியல் கலாசாரம் ஒன்று அமைய வேண்டும். அதற்காக தாம் போராடத்தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதற்கான அழுத்தங்களை தாம் வழங்கவுள்ளதாக கூறிய அவர் அந்த இலக்கை அடைய நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் ஒன்றுபட்டு அர்பணிப்புடன் கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்று மேலும் கூறினார்.

