இந்தியாவின் அழுத்தத்துக்குள் சிக்கினாரா மைத்திரி?
இந்தியாவின் கடுமையான அழுத்தத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மஹி...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_589.html
இந்தியாவின் கடுமையான அழுத்தத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கியதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பான றோவின் நேரடியான தலையீடுகளை மேற்கொண்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா அழுத்தங்களை கொடுப்பதற்கு கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது இந்தியாவுக்கு சுலபமானது. அத்துடன் சீனாவுடன் மஹிந்தவுக்கு இருக்கும் தொடர்புகள் சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியான நன்மையை ஏற்படுத்திக்கொடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

