நாட்டை வெற்றியடைய செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி

பொறாமை, வெறுப்பு, கோபங்கள் அழித்து தோழமையுடன் நாட்டை வெற்றியடைய செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...


பொறாமை, வெறுப்பு, கோபங்கள் அழித்து தோழமையுடன் நாட்டை வெற்றியடைய செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தேசிய இப்தார் விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அனைத்து மதங்களுக்கும் இடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வோடு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டை கட்டியெழுப்ப இவ்வாறான மத நிகழ்வுகளில் அனைவரும் இணைந்து கொண்டாடுவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் ஏ.எச்.எம்.பவுசி உட்பட அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் தூதுவர்கள், முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய மதத்தலைவர்கள் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 2571019909634069958

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item