ஐ.எஸ்.இஸ்லாத்திற்கு முரணான இயக்கம்

உலமா சபை தலைமையில் 11 அமைப்புகள் கூட்டாக பிரகடனம் ஐ.எஸ்.போன்ற இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணாக செயற்­படும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளுடன் எவ­...

உலமா சபை தலைமையில் 11 அமைப்புகள் கூட்டாக பிரகடனம்
ஐ.எஸ்.போன்ற இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணாக செயற்­படும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளுடன் எவ­ரா­வது தொடர்­பு­பட்டால் அதனை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தா­கவும் இவ்­வா­றான அமைப்­பு­க­ளுக்கும் இஸ்­லா­மிய விழு­மி­யங்­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது என உறு­தி­யாக தெரி­விப்ப­தா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யுடன் இணைந்து மேலும் 11 முஸ்லிம் அமைப்­புக்கள் கூட்­டுப் ­பி­ர­க­டனம் ஒன்­றினை வெளி­யிட்­டுள்­ளன.



இக்­கூட்­டுப்­பி­ர­க­ட­னத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை­யுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில், ஸ்ரீ லங்கா ஜமா­அத்தே இஸ்­லாமி, ஜமா­அத்­துஸ் ­ஸலாமா, ஜம்­இய்­யத்துஷ் ஷபாப், அல்­ முஸ்­லிமாத், ஐ.ஐ.ஆர்.ஓ, வாமி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. சம்­மே­ளனம், தப்லீக் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத், கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் என்­பன கையொப்­ப­மிட்­டுள்­ளன.

குறிப்­பிட்ட பிர­க­டனம் கொழும்பு மாளி­கா­வத்­தை­யி­லுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி தலை­மையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் வெளி­யி­டப்­பட்­டது.

பிர­க­ட­னத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது. ஐ.எஸ். ஒரு கடு­மை­யான தீவி­ர­வாத, இஸ்­லா­மிய அடிப்­படை விழு­மி­யங்­க­ளுக்கு எதி­ரான அமைப்­பாகும்.

இஸ்­லாத்தின் அனைத்து கொள்­கை­க­ளுக்கும் கோட்­பா­டு­க­ளுக்கும் முர­ணாக செயற்­படும் அமைப்­பாக இது காணப்­ப­டு­கின்­றது

மேற்­கு­லக ஊட­கங்கள் ‘ஜிஹாத் என்ற சொல்­லுக்கு கொலை செய்தல் நியா­ய­மற்ற முறையில் போர் தொடுத்தல் போன்ற பிழை­யான கருத்­துக்­களைப் பரப்­பு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றன.

எந்­த­வொரு அமைப்பும் ‘ஜிஹாத்’ என்ற சொல்லை அப்­பாவி மக்­களை கொலை செய்­வ­தற்­காக பயன்­ப­டுத்­து­மே­யானால் அது இஸ்­லாத்­திற்கு அதன் போத­னை­க­ளுக்கும் முற்றும் முர­ணா­ன­தாகும்.

ஐ.எஸ். அமைப்பு ஒரு தீவி­ர­வாத அமைப்பு என்றும் அது இஸ்­லா­மிய அடிப்­ப­டை­க­ளுக்கு முர­ணாக செயற்­ப­டு­கின்ற அமைப்பு என்றும் பல சர்­வ­தேச இஸ்­லா­மிய அமைப்­பு­களும், நாடு­களும் கண்­டனம் வெளி­யிட்­டுள்­ளன. உலமா சபையும் கடந்த வருடம் ஐ.எஸ். அமைப்பை கண்­டித்து அறிக்­கை­களை வெளி­யிட்­டன.

இஸ்லாம் மனித இனத்­திற்கு கருணை காட்டும் மார்க்­க­மாகும். சமா­தானம், அமைதி, பாது­காப்பு மற்றும் சகோ­த­ரத்­துவம் என்­பன இஸ்­லாத்தின் அடிப்­படை போத­னை­க­ளாகும். இஸ்லாம் ஒரு தனி­ம­னித கொலையை முழு சமூ­கத்­தி­னதும் கொலை­யாகக் கரு­து­கி­றது. இஸ்லாம் போதிக்­கின்ற சமா­தானம், அமைதி மற்றும் சகோ­த­ரத்­துவம் என்­பன சாதி, மத பேத­மின்றி அனைத்து மனி­தர்­க­ளுக்கும் பொது­வா­ன­வை­யாகும்.

இஸ்லாம் அனைத்து மனி­தர்­க­ளு­டனும் சமா­தா­ன­மா­கவும்,நீதி­யா­கவும், பொறு­மை­யு­டனும் நடந்து கொள்­ளு­மாறே கூறு­கின்­றது. மேலும் தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுதல், அநி­யாயம் இழைத்தல் போன்­ற­வற்றை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது. கொலை, கல­வரம் செய்தல், கடும்­போக்கு நட­வ­டிக்­கைகள் என்­ப­ன­வற்றை பெரும்­பா­வங்­க­ளா­கவும், குற்­றங்­க­ளா­கவும் கரு­து­கின்­றது.

எவ­ரா­வது ஒரு தனி நபர் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ராக இருந்தால் அவ­ருக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­ப­டியும் தண்­டனை வழங்கும் படியும் நாம் அர­சாங்­கத்தை கேட்டுக் கொள்­கிறோம்.

எமது நாட்டை இவ்­வா­றான சமூ­கத்­துக்­கெ­தி­ரான தீய செயல்­க­ளி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­காக அர­சாங்­கத்­துக்கும் அரச நிறு­வ­னங்­க­ளுக்கும் எமது உத­வி­க­ளையும், ஆத­ர­வி­னையும் வழங்­கு­வ­தற்குத் தயா­ராக உள்ளோம்.

முஸ்­லிம்கள் இந்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக நாட்டுப்பற்றுடன் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகிறார்கள்.

எமது தாய்நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என உறுதியாகக் கூறுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 8300971138212802331

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item