தங்க நகை திருட்டு :இருவர் கைது
வவுனியாவில் திருமண நிகழ்வுகளில், கோவில் திருவிழாக்களில் மற்றும் சன நெரிசல் மிக்க இடங்களில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண் ஒருவரும் அவருக்கு ...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_339.html
வவுனியாவில் திருமண நிகழ்வுகளில், கோவில் திருவிழாக்களில் மற்றும் சன நெரிசல் மிக்க இடங்களில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அப்பெண்ணின் கணவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி திருட்டு சம்பவங்கள் குறித்து வவுனியா பொலிசாருக்கு முறையிட்டதைத் தொடர்ந்து வவுனியா பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி சன் அபயரெட்னவின் அறிவுறுத்தலுக்கமைய உப பொலிஸ் பரிசோதகர் நிலாந்த தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள்களான (36508) ஜெயபிரகாஸ், (37348) திசநாயக்க மற்றும் (64662) புத்திக்க ஆகியோரின் குழு புலன்விசாரணைகளை மேற்கொண்டதுடன் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை கிளிநொச்சியில் வைத்து கைது செய்தனர்.

