கூட்டணியில் விட்டு விலகியவர்கள் மைத்திரி – மஹிந்த இணைப்பிற்கு தடையானவர்கள்: கெஹெலிய
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சிலர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_211.html
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சிலர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இருந்து விலகியிருப்பது மைத்திரி – மஹிந்த இணைப்பிற்கு தடையாக இருந்தவர்கள் என அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிக்கல் நிலை காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

