கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக டலஸ் அழகப்பெரும முறைப்பாடு
முன்னாள் வெலிகம பிரதேச சபை தலைவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ச...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_109.html
முன்னாள் வெலிகம பிரதேச சபை தலைவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று முற்பகல் மாத்தறை மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தவேளை டலஸ் அழகப்பெருமவிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மாத்தறை பொலிஸ் நிலையத்திற்கு நேரில் சென்று முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

