சரத் பொன்சேகா தாக்கல் செய்த ரீட் மனு தள்ளுபடி

ஜனாதிபதி தனக்கு பொதுமன்னிப்பு வழங்கியதால், தனக்குரிய நாடாளுமன்ற ஆசனத்தை வழங்குமாறு கோரியும், நாடாளுமன்ற செயலாளருக்கு அது தொடர்பில் உத்தரவொ...

ஜனாதிபதி தனக்கு பொதுமன்னிப்பு வழங்கியதால், தனக்குரிய நாடாளுமன்ற ஆசனத்தை வழங்குமாறு கோரியும், நாடாளுமன்ற செயலாளருக்கு அது தொடர்பில் உத்தரவொன்றை பிறக்குமாறும் கோரியும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்திருந்த ரீட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
அப்படியான உத்தரவொன்றை விடுக்க தேர்தல் சட்டத்திலோ அல்லது வேறு சட்டங்களிலோ வாய்ப்புகள் இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சரத் பொன்சேகா 90 ஆயிரம் வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து இராணுவ நீதிமன்றத்தினால் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்தும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்போனது.

இதேவேளை சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜயந்த கெட்டகொட வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related

தலைப்பு செய்தி 9132707171310676065

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item