நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுதந்திரக் கட்சி எச்சரிக்கை

நம்பிக்கையில்லா தீர்மானங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மூன்று ...

நம்பிக்கையில்லா தீர்மானங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மூன்று நம்பிக்கையில்லா தீர்மான யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானங்களில் இரண்டு நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனைகள் இவ்வாறு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை அடுத்த மாதம் வரையில் ஒத்தி வைக்காது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இது குறித்து வலியுறுத்தப்படும்.

1935ம் ஆண்டில் அரச மந்திரிகள் சபை, ஆளுனருக்கு ஆதரவளிக்காததனைப் போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் மஹிந்த ஆதரவு தரப்பினர் என்ன சொன்னாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஜனாதிபதி மைத்திரியை நெருக்கடிக்குள் ஆழ்த்த சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினர் விரும்பவில்லை என குறித்த வார இறுதி பத்திரிகை தெரிவித்துள்ளது.

Related

தலைப்பு செய்தி 9040529630574285994

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item