காவற்துறையினர் மீது தாக்குதல்: 15 பேருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம், கொடிகாமம் பிரதேசத்தில் காவற்துறையினரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 15 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர...
https://kandyskynews.blogspot.com/2015/06/15_21.html
கைது செய்யப்பட்டவர்களை சாவகச்சேரி பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் 03ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களில் 10 ஆண்கள் மற்றும் 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
நேற்று முன்தினம் போதை பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்ற போது காவற்துறை அதிகாரிகளை தாக்கியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

