இலங்கைக் கிரிக்கெட்டுக்கான நிதி உதவிகளை இடைநிறுத்தியது ஐ.சீ.சீ

இலங்கைக் கிரிக்கெட்டுக்கான நிதி உதவிகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது. இலங்கைக் கிரிக்கெட்டின் நிறுவனம் கலைக்கப்பட்டு இடைக...

இலங்கைக் கிரிக்கெட்டுக்கான நிதி உதவிகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது.

இலங்கைக் கிரிக்கெட்டின் நிறுவனம் கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாக சபை நிறுவப்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாக சபை நிறுவப்பட்டமைக்கான சரியான விளக்கம் அளிக்கப்படும் வரையில் இலங்கைக்கா நிதி உதவிகள் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாக சபை நிறுவப்பட்டமை சர்வதே கிரிக்கெட் பேரவையின் சரத்துக்களுக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதாக தென்படுகின்றது எனவும் இதன் காரணமாக நிதி உதவிகள் இடைநிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சபை நிர்வாகத் தெரிவிற்கான தேர்தல்கள் வெளிப்படைத்தன்மையுடன் நீதியான முறையில் நடைபெற வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னாள் கிரிக்கெட் நிர்வாகத்தினருடன் இணைந்து சூழ்ச்சி செய்வதாக அமைச்சர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது

Related

விளையாட்டு 4875574510492114421

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item