கண்ணாடி சீட் விழுந்து கழுத்து வெட்டப்பட்டு வபாத்தான 28 வயது முஸ்லிம் இளைஞர் விபரம்.
கண்ணாடி விற்பனை நிலையமொன்றில் கண்ணாடிக் குற்றிகள் சரிந்து விழுந்தமையால் 24 வயது முஸ்லிம் இளைஞனொருவன் நேற்று 31.03.2015 உயிரிழந்துள்ளார்...
https://kandyskynews.blogspot.com/2015/04/28.html


கண்டி நகரில் கண்ணாடிகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தொழில் புரிந்து வந்த உடுநுவர பூவெலிக்கடையை சேர்ந்த முஹம்மத் இஸ்ஹாக் என்ற இளைஞன் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவரின் ஜனாஸா கண்டி வைத்தியசாலையில் வைக்கபட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்

