பொதுமன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகினர்!
தப்பிச்சென்ற படையினருக்கு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர். உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல்...
https://kandyskynews.blogspot.com/2015/04/1619.html
கடந்த 2ம் திகதி முதல் 5ம் திகதி வரையில் தப்பிச் சென்ற 1619 படையினர் பதவி விலகிக் கொண்டுள்ளனர். எதிர்வரும் 16ம் திகதி வரையில் இந்தப் பொது மன்னிப்புக்காலம் அமுலில் இருக்கும். புத்தாண்டுக்கு முன்னதாக பதவி விலகி, சுதந்திரமாக புத்தாண்டை கொண்டாடுமாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். பதவி விலக வரும் இராணுவ வீரர்கள் ஆவணங்களுடன் வங்கி கணக்கு விபரங்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

