கைது செய்யப்பட்ட பிரான்ஸ் பிரஜை விடுதலைப்புலிகளின் தளபதியாம்?
பிரான்ஸ் பிரஜைகளான தாயும் மகளும் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சியில்...
https://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_84.html
பிரான்ஸ் பிரஜைகளான தாயும் மகளும் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சியில் உள்ள தமது பெற்றோரை பார்க்கவென பிரான்ஸில் இருந்து சென்ற, ஜெயகணேஸ் பகீரதி என்ற பெண்ணும் அவரது 8 வயது மகளான ஜெயகணேஸ் பகலவி ஆகியோருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தாய் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவர் என சிறிலங்கா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த பெண் 1997 முதல் 2000 ஆம் ஆண்டு வரை கடற் புலிகளின் பெண்கள் பிரிவின் தளபதியாக செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பகிரதியும் பகலவியும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

