மகிந்த பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கண்டறிய உதவுகிறது இந்தியா!
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணத்தை மீட்பதற்காக நிதி புலனாய்வு பிரிவொன்றை உருவாக்க...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_83.html
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணத்தை மீட்பதற்காக நிதி புலனாய்வு பிரிவொன்றை உருவாக்குவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவி வழங்கவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பல பில்லியன் டொலர் பணத்தை மீட்பதென்று தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதியாகவுள்ளது.இதற்காக நிதிபுலனாய்வு பிரிவொன்றை அமைப்பதற்காக புதிய அரசாங்கம் மோடி அரசாங்கத்தை உத்தியோகப்பற்றற்ற முறையில் நாடியுள்ளது. உத்தியோகபூர்வ வேண்டுகோள்களை விரைவில் சிறிசேன அரசாங்கம் முன்வைக்கலாம். இந்தியாவில் காணப்படும் நிதி புலனாய்வு அமைப்பின் பாணியிலேயே இலங்கை அமைப்பு உருவாக்கப்படும். இந்திய நிதியமைச்சு இது குறித்த தனது அனுபவங்களை கொழும்புடன் பகிர்ந்துகொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

